India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் கன்னியாகுமரியை சேர்ந்த வினிஷா(24). திருமணமாகாத இவருக்கு, உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் 7 மாதமாகி குறை பிரசவத்தில், தனக்குத் தானே பிரசவம் பார்த்து அதனை கொலை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் வரும் ஜூலை மாதத்தில் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்து நேற்று தகவல் வெளியான நிலையில் இன்று(மே 1) உறுதியாகியுள்ளது. மேலும், அவ்விடத்தில் ரூ.823 கோடியில் போக்குவரத்து முனையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள திரையரங்குகளில் ‘பில்லா’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பில்லா’ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று உழைப்பாளர் தின விடுமுறை என்பதால் காலை முதல் அஜீத் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். பேனருக்கு மாலை அணிவித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று(மே 1) விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அத்துடன், பயணிகள் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கஞ்சா, கஞ்சா சாக்லெட், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான 7 நாளில் கஞ்சா கடத்திய 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் இருந்து வியாசர்பாடி செல்லும் சாலையில் கல்லூரி மாணவர் விஷ்வா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாநகரப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே விஷ்வா பலியானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மாநகரப் பேருந்து ஓட்டுநர் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று(மே 1) முதல் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரும்பாக்கம் மற்றும் பரங்கி மலை மெட்ரோ நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை: நாளை (மே.1) அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8 முதல் நண்பகல் 11 வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும் காலை 5-8 மணி வரை, நண்பகல் 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8-10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.நகர் சாரதி தெருவை சேர்ந்தவர் மாதவன்(67). இவர், பெங்களூரில் வசிக்கும் தனது பேத்தியை பார்க்க கடந்த பிப்.24ஆம் தேதி சென்று அங்கு தங்கியுள்ளார். ஏப்.24ஆம் தேதி சென்னை திரும்பிய நிலையில், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்புறக் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 15 கிலோ பித்தளை பாத்திரங்கள் திருடு போயிருந்தது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை இன்றைக்குள் (30.4.24) செலுத்தினால், வரியில் 5% வரை தள்ளுபடி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்தாவிட்டால், 1% வட்டியுடன் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.