India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென அதிகரித்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ரூ.120-க்கு விற்கப்பட்ட பீன்ஸ், தற்போது 1 கி.லோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், கேரட் ரூ70க்கும், அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும், எலுமிச்சை ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சென்னையில், பிளாக்கில் IPL டிக்கெட் விற்ற 10 பேர் நேற்று (மே.12) கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் பிளாக்கில் டிக்கெட் விற்றதாக 10 பேரை கைது செய்த திருவல்லிக்கேணி போலீசார், 27 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக, ‘பறக்கும் டாக்சி’ தயாரிப்பில் சென்னை IIT ஈடுபட்டுள்ளது. இந்த டாக்சி தரையிறங்கவும், பறக்கவும், 15 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய இடம் போதும். இதில் 2 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், 25 கி.மீ தூரத்தை 10 நிமிடத்தில் சென்றடையலாம். இது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடயது என தகவல்.
சென்னை, புழுதிவாக்கம் 186 ஆவது வார்டு பாலாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை, வீராங்கல் ஓடையில் இணைப்பது தொடர்பாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் 186 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் கலந்துகொண்டார்.
சென்னை
தாய்மார்களை போற்றும் வகையில் இன்று(மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில், “அன்னை என்பவர் வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத வகையில் நம் வாழ்வை வடிவமைக்கிறார். நம் வாழ்வின் பேரன்பு மற்றும் நெகிழ்ச்சி மிக்க அற்புதமான தூண்களுக்கு அன்னையர் தின வாழ்த்து” என்று பதிவிட்டுள்ளார்.
‘ஜீவிதா நௌகா ‘ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பேபி கிரிஜா. இதையடுத்து ‘அச்சன்’, ‘விஷப் பிண்டே விலி’, ‘பிரேமலோகா ‘, ‘அவன் வரன்னு ‘, ‘புத்திர தர்மம்’ போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி சென்னையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார். பழம்பெரும் நடிகையான கிரிஜா (82) சென்னை அண்ணா நகரில் உள்ள
அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
மெட்ரோ ஊழியரை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் மீது இன்று சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆற்காடு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது குறித்து மெட்ரோ ஊழியர் வடிவேலுடன் பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் வாக்குவாதம் ஏற்பட்டு வடிவேலுவை தாக்கியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மாதவரம்-எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வரை 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்கேற் தங்கள் திட்டங்களை அமைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.