India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ஈசிஆரில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும். மேலும், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், குறிப்பாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்றும் 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு, ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவர்களை கொண்டு தாம்பரம் மற்றும் ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இது வரவேற்பை பெற்றள்ளது.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும் என்றும், கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்
வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சோமு (சோமசுந்தரம்) எம்.கே. பாலன் கொலை வழக்கில் கடந்த 2001ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த அவர், 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக உருவெடுத்து தலைமறைவாகி இருந்து வந்துள்ளார். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.கே.பி.நகரில் உள்ள முல்லை நகர் பகுதியில் போலீசார் துப்பாக்கி முனையில் அவரை இன்று (மார்.14) கைது செய்தனர்.
சென்னை மெட்ரோ ரயிலின் 3ஆவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ திட்டங்கள் அறிவிப்பு வெளியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று (மார்.14) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் 20 காசுகள் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும், விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கமும், கோவளம் அருகே உபவடி நிலத்தில் 3,010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. இதற்கேற்ற, குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது. சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.