India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உடன் சோதனை செய்து வருகின்றனர். போலீசார், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள், அங்கு கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.
அம்மா உணவகங்களை புது பொலிவாக்கி, ருசியான உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த, ரூ.5 கோடி செலவில் பணிகளை தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் பழுதான சமையலறைகள், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் மாற்றப்பட உள்ளன. மேலும், வர்ணம் அடிக்கப்பட்டு சீரமைப்பு பணிகளை தொடங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இன்று மற்றும் நாளை (ஜூன் 14,15) இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வரும் சூழலில், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது சென்னைவாசிகளுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. அதிகபட்சமாக மணலி, திரு.வி.க.நகா் ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடை காலம் தொடங்கியது. 61 நாட்களுக்குப் பிறகு இன்று இரவு 12 மணியுடன் (ஜூன் 14) முடிகிறது. 2 மாதங்களாக சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்கின்றனர். இதனால் மீன்களின் விலை குறையும் என தெரிகிறது.
I.N.D.I.A கூட்டணி சார்பில் திருவள்ளூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் சசிகாந்த், விஜய் வசந்த், சுதா ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர. இந்நிலையில், நேற்று பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று மேயர் பிரியா தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை பயன்பாட்டிற்கான உபகரணங்களை ஸ்கூல் (SCHOOL) தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா. கணபதி மாநகராட்சி ஆணையர் உடன இருந்தனர்.
சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கண்காட்சி இன்று முதல் ஜூன் 17 வரை நடைபெற உள்ளது. 6ஆவது முறையாக நடைபெறும் இக்கண்காட்சியில், பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பதற்கான இயந்திரங்கள், அச்சுகள், வார்ப்புகள், துணைப் பொருள்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கானோர் பார்வையிடுவார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சென்னையில் நாளை(14.6.24) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், பல்லாவரம், அடையார், எழில் நகர், தண்டையார்பேட்டை, மாதவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று தனது அதிகாரப்பூா்வ “X” தளத்தில் தெரிவித்துள்ளது.
கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாட்களுக்குப் பிறகு நாளையுடன் (ஜூன்-14) முடிகிறது. 2 மாதங்களாக சென்னை, காசிமேடு கடலூர், உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தன. நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.