Chennai

News May 15, 2024

UPDATE: மெட்ரோ சேவை நாள் முழுவதும் ரத்து

image

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் சேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விமான நிலையம் செல்ல, ஆலந்தூர் சென்று பச்சை வழித்தடத்தில் செல்லலாம். விம்கோ நகர்- விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்.

News May 15, 2024

மெட்ரோ ரயில் சேவை சீரானது

image

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, தொழில்நுட்ப கோளாறுகளை ஊழியர்கள் சரி செய்த நிலையில், நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீராக இயங்கும் என தெரிவித்துள்ளனர்.

News May 15, 2024

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து

image

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், நீலவழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் செல்ல, ஆலந்தூர் சென்று பச்சை வழித்தடத்தில் செல்லலாம். விம்கோ நகர்- விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்.

News May 15, 2024

சென்னை மாநகராட்சி நீர் பந்தல்கள் அகற்றம்

image

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், ஆயிரம் விளக்கு உட்பட பல பகுதிகளில் நீர் நிரப்ப படாததால் அவை அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் பந்தல்களை பொதுமக்களும் கண்டு கொள்ளவில்லை மாநகராட்சியும் பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

News May 14, 2024

நேரில் ஆஜராக பாஜக வேட்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

image

அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் ஜூன் 6 ஆம் தேதி ஆஜராக வேண்டுமென்று எழும்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் பயன்படுத்தவில்லை என செல்வம் X தளத்தில் பதிவிட்டிருந்தார். எனவே தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக தகவல் பரப்பியதற்தாக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

சென்னை மாநகராட்சி நீர் பந்தல்கள் அகற்றம்

image

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், ஆயிரம் விளக்கு உட்பட பல பகுதிகளில் நீர் நிரப்ப படாததால் அவை அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் பந்தல்களை பொதுமக்களும் கண்டு கொள்ளவில்லை மாநகராட்சியும் பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

News May 14, 2024

கிண்டியில் மஞ்சள் காய்ச்சல் ஊசி போட்டுக் கொள்ளலாம்

image

தமிழ்நாட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள 3 மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி மையங்களில் பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய
ஏதேனும் ஆவணங்களை காண்பித்து கிண்டியில் உள்ள பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம் ஊசி போட்டு கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News May 14, 2024

சென்னையில் 4 நாட்கள் ரயில்சேவை ரத்து

image

பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்களுக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
இன்று முதல் 17 ஆம் தேதி வரை மதியம் 12 :10 மணி முதல், மாலை 4:30 மணி வரை, 4 மணி நேரம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News May 14, 2024

குற்ற வழக்கு இருந்தால் பாஸ்போர்ட் கிடையாது

image

குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியது.

News May 14, 2024

சென்னையில் கஞ்சா விற்பனை 85 பேர் கைது

image

சென்னை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 7 ஆம் தேதி முதல் நேற்று வரை 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 63 வழக்குகள் பதிவு செய்து 85 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 37.92 கிலோ கஞ்சா, 3.5 கிலோ கிராம் ஓப்பியம் , 2 கிராம் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!