India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை பட்டியில் அடைப்பது போல் அடைத்து திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கின்றனர். மேலும், திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இதனால்தான் நாங்கள் விக்bகிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கூறியுள்ளார்
சென்னையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி செய்தி நிறுவனம் தொடங்கப்பட்டு 86 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழில் வானொலி அறிவிப்பு வெளியாகத் தொடங்கி ஏறத்தாழ நூறாண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில், சென்னை வானொலி நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழ் மொழி நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் 9 மொழிகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வெளிநாட்டு நாய்களை தமிழ்நாட்டில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாய்களை வகைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்துகளை ஒன்றிய அரசு கோரியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் “நாய்களின் உளவியல் குறித்தும் அவற்றின் நடத்தை குறித்தும் ஆய்வு செய்த பிறகே அவை ஆக்ரோஷமானவையா , இல்லையா என முடிவெடுக்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் விஐடி வேந்தர் முனைவர் கோ விஸ்வநாதனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை பாராட்டும் விதமாக இன்று சைதாப்பேட்டை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு உரையாற்றினார்.
சென்னை துறைமுகம் பகுதியில் சாலையோர வியாபாரிகள் வைத்திருந்த கடைகளை சென்னை மாநகராட்சி சமீபத்தில் அகற்றியது. இந்த நடவடிக்கையின் காரணமாக வியாபாரி கிருஷ்ணவேணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சாலையோர வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
சென்னை திமுக – காங்கிரஸ் உறவில் விரிசல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும், “தேர்தலில் திமுக வெற்றி பெற காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும். திமுகவை எதிர்த்து போட்டியிடும் கட்சிகள் டெபாசிட் இழக்கும்” என்று கூறினார். இதனால், திமுக – காங்கிரஸ் உறவு சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில், பணமில்லா பரிவர்த்தனை 100% பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மதுரை, தூத்துக்குடி, கோவை, உள்ளிட்ட நகரங்களுக்கு சென்னையிலிருந்து 1,100க்கும் மேற்பட்ட பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் கூகுள்பே, போன்பே வாயிலாக டிக்கெட் பெறும் வசதி மே மாதம் சோதனை முறையில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது
முன்னாள் ஆளுநர் தமிழிசையை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற காணொளி வெளியானது குறித்து அண்மையில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கிண்டலாக பேசியிருந்தார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தனது X தளத்தில் இதை குறிப்பிட்டு, “தமிழிசை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்காக வழக்குத் தொடருவேன். ஏற்கெனவே மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
சென்னையில் மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று(15.6.24) பல்வேறு பகுதியில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, போரூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சோழிங்கநல்லூர், கே.கேநகர், ஐடிசி, மாதவரம், வியாசர்பாடி, சிறுசேரி ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடித்தால், மின்விநியோகம் கொடுக்கப்படும் என்றனர்.
புளியந்தோப்பு ஸ்ட்ரகான்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளது. இதனால், அச்சாலையில் இன்று(15.6.24) முதல் 17ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், பெரம்பூர் பேரக்ஸ்சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அம்பேக்கர் கல்லூரி சாலை ஆகிய சாலைகளில் இருந்து ஸ்ட்ரகான்ஸ் சாலை வந்து செல்வதற்குதடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் நியூ பெரன்ஸ்சாலை, செல்லப்பாதெரு வழியாக செல்லலாம்.
Sorry, no posts matched your criteria.