Chennai

News June 18, 2024

சென்னை: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

image

சென்னை மயிலாப்பூரில், 6 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொச்சிக்குப்பம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன், அங்குள்ள நாய்களுக்கு பிஸ்கெட் போட்டுள்ளான். அதை சாப்பிட்ட தெரு நாய்கள், திடீரென சிறுவனை தோள்பட்டை, தலை, கால், கைகளில் கொடூரமாக கடித்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

News June 18, 2024

பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அசோக் நகர், அண்ணா நகர், தண்டையார்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் இடைவிடாமல் பெய்த மழை, அதிகாலை வரை தொடர்ந்தது. இதனால், விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தாமதமானது.

News June 17, 2024

சொத்து வரி செலுத்தாதவர்களின் பட்டியல் வெளியீடு

image

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவர்களால், மக்களுக்கான வளர்ச்சி பணி பாதிக்கிறது. சிலர் ₹7 லட்சம் முதல் ₹2 கோடி வரை நீண்டகாலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். சொத்து வரி நிலுவை வைத்திருப்போரில், அதிகபட்ச நிலுவைத் தொகை அடிப்படையில் முதல் 100 பேர் பட்டியல் தற்போது சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News June 17, 2024

மூத்த குடிமக்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் கட்டணம் இன்றி செல்வதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணம் இன்றி பயணம் செய்ய வருகின்ற 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 42 பணிமனைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. இதை வாங்க ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் (ம) 2 புகைப்படங்களை அளித்து பெற்றுக் கொள்ளலாம்.

News June 17, 2024

“பெண்ணை முட்டிய மாட்டுக்கு யாரும் உரிமை கோரவில்லை”

image

சென்னை, திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவொற்றியூரில் நேற்று பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கி 50 மீட்டர் இழுத்துச் சென்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாடு பிடிக்கப்பட்டு பெரம்பூர் கால்நடை பராமரிப்புக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News June 17, 2024

தியாகத்திருநாள் சிறக்கட்டும் – கமல்ஹாசன்

image

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் இன்று(ஜூன் 17) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக , உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக , உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக தியாகத்திருநாள் சிறக்கட்டும் ” என ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News June 17, 2024

சென்னை விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு

image

சென்னை விமான நிலையத்துக்கு நேற்று(ஜூன் 16) நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அடுத்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

News June 17, 2024

சென்னை மெட்ரோ: சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்

image

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் இன்று(ஜூன் 17) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 – 11 மணி வரை & மாலை 5 – 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 – 8 & காலை 11 – மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 – 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.

News June 16, 2024

வீடு புகுந்து பெண்ணிடம் வன்கொடுமை

image

போரூர் அருகே சேக்மானியம் பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் பிரியா (35). நேற்று இவரது வீட்டின் உரிமையாளரான ஆதம்பாக்கம், பாரத் நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் (44) என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து இவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவர் சத்தம் போடவே அங்கிருந்து சங்கர் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரில் போலீசார் சங்கரை இன்று கைது செய்தனர்.

News June 16, 2024

முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

image

முகூர்த்த நாள் மற்றும் வரத்து குறைவு காரணமாக சென்னையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூவின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 700 – ரூ.800 என்ற அளவில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று ஒரு கிலோ ரூ.1,200 ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டது. முல்லைப்பூ ரூ.500க்கும், ஜாதி மல்லி ரூ.600க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!