Chennai

News May 14, 2024

ரயிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10 – வது நடைமேடையை நேற்று மும்பையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கி கொண்டிருந்தது. அப்போது ரயிலின் கதவு அருகே நின்று விளையாடி கொண்டு இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை படிக்கட்டு வழியாக தவறி வெளியே விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக சிறு காயங்களுடன் குழந்தை உயிர் தப்பியது.

News May 14, 2024

சென்னை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 33ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் சென்னை மாவட்டம் 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 81.02% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 64.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: சென்னையில் 92.02% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை மாவட்டத்தில் மாணவர்கள் 88.52% பேரும், மாணவியர் 94.51% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.02% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

சென்னை: 1 வாரத்தில் 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் மே 12 வரை 496 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மே 6 முதல் 12 வரையிலான 1 வார காலத்தில் 1 திருநங்கை உட்பட 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

News May 14, 2024

மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.200 கோடி கையாடல்?

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருபவர் துளசிதாஸ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தொழிலாளர்களின் மாதாந்திர ஆயுள் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.200 கோடியை மாநகர உதவி போக்குவரத்து கழக மேலாளர் ரஜினி என்பவர் கையாடல் செய்து விட்டதாகவும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நாள் ஆகியும் உரிய பதிலை கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

சென்னை:  42 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் மே 12 வரை 496 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மே 6 முதல் 12 வரையிலான 1 வார காலத்தில் 1 திருநங்கை உட்பட 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

News May 13, 2024

சென்னை: என்ட்ரி ஆயிடுச்சா..அதிர்ந்த பயணிகள்

image

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சர்வ சாதாரணமாக தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். யாரும் எளிதில் நுழைய முடியாத சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பினை மீறி நாய்கள் புகுந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சுறுத்தும் வகையில் உலா வரும் நாய்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 13, 2024

சென்னை மாநகராட்சியில் குவியும் விண்ணப்பம் 

image

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற தவறும் பட்சத்தில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 10ம் தேதி சென்னை மாநகராட்சி எச்சரித்து இருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பித்துள்ளதாக சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 930 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள
விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

News May 13, 2024

வண்டலூர் பூங்காவின் சிறப்பு!

image

வண்டலூர் உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா செங்கல்பட்டில் அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலை ஒரு புலி, ஒரு சிறுத்தையுடன் 1855இல் நிறுவப்பட்டுள்ளது. இது மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைக்கப்பட்ட, இந்தியாவின் பெரிய உயிரியல் பூங்காவாகும். சுமார் 228.4 ஏக்கர் பரப்பளவில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பகுதி உட்பட 1,490 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.

News May 13, 2024

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

image

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென அதிகரித்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ரூ.120-க்கு விற்கப்பட்ட பீன்ஸ், தற்போது 1 கி.லோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், கேரட் ரூ70க்கும், அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும், எலுமிச்சை ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!