India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பு அரசியலையும் ஜாதி மத மொழி அரசியலையும் மேற்கொண்டு வருவதாகவும் தமிழர்களை இழிவு படுத்துவதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் மே24 முதல் ஜூன் 2ம் தேதி வரை, ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படும் என சென்னை குடிநீர்வாரியம் தெரிவித்துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்ட நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 4மண்டலங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற http://cmwssb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
சென்னை மாவட்டத்தில் இன்று (மே.22) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தி.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்த போது மொத்தம் 341 பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 4 பேரை தேடி வருகின்றனர்.
சென்னை: கீழ்ப்பாக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் டேவிட்(26) என்பவர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய ராணிப்பேட்டையைச் சேர்ந்த அஜிமின் காரை, டேவிட்டின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். போலீசார், அஜிமினை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன் (50). இவர் கோயம்பேடு மார்க்கெட் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் அவரை தாக்கி ஆட்டோவை வழிப்பறி செய்து சென்றனர். இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் பாண்டியன் புகார் அளித்தார். இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட ஏபெல் (19) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 700 வாகனங்களில் 7ஆயிரம் டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று 5 ஆயிரம் டன் காய்கறிகளே வந்தன. இதனால், சின்ன வெங்காயம் 60 இருந்து ரூ.70, தக்காளி 30 இருந்து ரூ.40, கேரட் 50 இருந்து ரூ.60, வெண்டைக்காய், பாகற்காய், சேனை கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் ரூ.40 இருந்து ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் காய்கறிகள் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னை எழும்பூர்- கோட்டை ரயில் நிலையம் இடையே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார ரயில்கள் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிக்னலில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் 2வயது மகள் கவிதா கடந்த 2011ம் ஆண்டு காணாமல் போனார். கணேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார், பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பழைய படத்தை வைத்து புதிய தொழில்நுட்பத்தின் மூலம்(AI) தற்போது எப்படி இருப்பார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மகளை எப்படியும் கண்டு பிடித்து விடலாம் என 13 ஆண்டாக கணேஷன் காத்திருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.