Chennai

News May 24, 2024

இர்பான் மீது ஏன் நடவடிக்கை இல்லை – ஜெயக்குமார்

image

யூடியூபர் இர்பான் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இர்பான், உதயநிதிக்கு நெருங்கியவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ஆனால், சாமானிய மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருந்தால் கைது, குண்டாஸ் என வழக்கு மேல் வழக்கு போட்டிருப்பார்கள் ” என கூறினார்.

News May 24, 2024

சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா ரயில்

image

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இன்றிரவு 9.25 மணிக்கு முன்பதிவில்லாத MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9 நிறுத்தங்களுடன் நாளை காலை 5.30 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

News May 24, 2024

தலைமை காவலர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

image

சென்னை ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலரின் காலில், துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் துப்பாக்கியை சரிபார்க்கும் போது உதவி ஆய்வாளர் தவறுதலாக விசையை அழுத்தியதில், எதிரே இருந்த தலைமை காவலர் சிவக்குமாரின் கால் முட்டியில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் விசாரிக்கின்றார்.

News May 24, 2024

சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த அனுமதி

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சவுக்கு சங்கர் இன்று எழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் இன்று மாலை 6 மணி வரை விசாரணை மேற்கொள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கினார். பின் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

News May 24, 2024

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

image

நாளை மற்றும் நாளை மறுநாள் முகூர்த்த தினம் என்பதால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,460 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News May 24, 2024

ரூ.500 தொட்டால் ரூ.5000 கிடைப்பதாக மோசடி

image

ஆதம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (43). இவர் நேற்று முகநூலில் ரூ500 மந்திர நோட்டை தொட்டு ரூ.5000 கேஷ் பேக் பெறுங்கள் என்ற வாசகத்துடன் கூடிய லிங்கை தொட்டுள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. ஜிபேயில் பெலன்ஸ் செக் செய்து பார்த்தபோது ரூ4650 வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

News May 24, 2024

பெண்ணின் கை ஆணுக்கு பொருத்தி அசத்தல்

image

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து 2 பேருக்கு, மூளைச்சாவு அடைந்தவர்களின் கைகளை பொருத்தி மருத்துவர்கள் அசத்தல். இந்தியாவில் அதிக கைகளை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம். குறிப்பாக பெண் ஒருவரின் கை ஒன்றை இளைஞருக்கு பொருத்திய நிலையில் நல்ல முறையில் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News May 24, 2024

குடிநீர் சேவையில் மாற்றம்

image

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற http://cmwssb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News May 24, 2024

தனியார் பொருட்காட்சி பூங்காவிற்கு சீல்

image

பல்லாவரம் ஆட்டுத்தொட்டி பகுதியில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் நிறுவனத்தின். பொருட்காட்சிப் பூங்கா செயல்பட்டு வந்தது. உரிய அனுமதி பெறவில்லை என கூறி பல்லாவரம் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் பொருட்காட்சி உரிமையாளர் செந்தில் குமார், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளிடம் அனுமதி வாங்கியுள்ளோம் எனவும், வருவாய் துறையிடம் அனுமதி வாங்க வேண்டிய தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.

News May 23, 2024

பிரதமர் நரேந்திர மோடி மீது போலீசில் புகார்

image

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சார்பில் பொது செயலாளர்கள் டி.செல்வம், வழக்கறிஞர்கள் பி.தாமோதரன், அருள் பெத்தையா , உள்ளிட்டோர் இன்று போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலை அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, மறைமுகமாக தமிழர்களை திருடர்கள் என கூறி தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்தனர்.

error: Content is protected !!