Chennai

News May 26, 2024

பெற்றார் கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை

image

வடபழனி பக்தவச்சலம் முதல் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மூத்த மகள் மதுமிதா (15). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் இருக்கிறார். இந்நிலையில், இவர் வீட்டில் செல்போனை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆறுமுகம் மகளை கண்டித்துள்ளார். இதனால் மனவருத்தமடைந்த சிறுமி நேற்று காலை பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 26, 2024

திருச்சி -தாம்பரம் இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்

image

சென்னை புறநகர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யு ரயில், தற்போது சிறப்பு ரயிலாக சென்னை திருச்சி இடையே வார இறுதி நாட்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று (மே 26) இரவு 11 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியே, நாளை (மே 27) காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில் கழிப்பறை வசதி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

News May 26, 2024

விசிக சார்பில் விருது வழங்கல் 

image

சென்னை காமராஜர் அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா -2024 நேற்று (மே25) நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் மக்களுக்காக தொண்டாற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். 

News May 26, 2024

கோயம்பேட்டில் காய்கறிகள் விலை நிலவரம்

image

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிலோ தக்காளிரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.220-க்கும், சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும், முள்ளங்கி ரூ.50-க்கும், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் ரூ.60-க்கும், சுரைக்காய்-ரூ.40-க்கும் விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலை உயர்வால், மக்கள் ஆடிப் போயுள்ளனர்.

News May 26, 2024

போலீஸ் என கூறி ரூ.1.42 லட்சம் மோசடி

image

வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (52). இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், “நான் மும்பை போலீசில் இருந்து பேசுகிறேன். நீங்கள் கூரியர் மூலம் போதை பொருளை அனுப்பியுள்ளிர்கள். இவ்வழக்கில் ஜாமின் பெற ரூ.1.42 லட்சம் அனுப்ப வேண்டும்” என கூறியுள்ளார். இவரும் அனுப்பியுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இவர் வடபழனி போலீசில் புகார் அளித்தார்.

News May 25, 2024

சென்னை ரயில்வே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

சென்னை ஐசிஎப் ரயில்வே நிறுவனத்தில்  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் உள்பட 9 வகையான பிரிவுகளில் மொத்தம் 1010 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு பதவியின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News May 25, 2024

தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது

image

ராயப்பேட்டையை சேர்ந்த ஒய்வு பெற்ற அண்ணா பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர் ஹமீது உசேன். இவர் தந்தை அகமது மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான். இவர்கள் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் – உத்- தஹ்ரீர் இயக்க கொள்கைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வந்தனர். இதை கண்காணித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்தனர்.

News May 25, 2024

பட்டா மாறுதல் – தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை!

image

சென்னை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை, 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நடைமுறையை விரைவு படுத்தி கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகாவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.

News May 25, 2024

போதை ஊசி செலுத்தியவர் மயங்கி விழுந்து சாவு

image

புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையைச் சேர்ந்த அமீர் பாஷா மகன் ஜாகீர்(17). நேற்று பிற்பகல் 3 மணியளவில் பிராட்வேயில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்து போதை ஊசியை செலுத்தினார். பின் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறினர். எஸ்பிளனேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 25, 2024

சென்னை தயாராக உள்ளது!

image

சென்னை தி.நகரில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்த தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, திடீர் மழை வரும்போது அதனை எதிர்கொள்ள சென்னை மட்டுமல்லாமல் எந்த நகரமாக இருந்தாலும் அதை தாங்காது. ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள சென்னை தயாராக இருக்கிறது. மழையால் பாதித்த பயிர் சேதங்களை கணக்கெடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களிடம் கூறியிருக்கிறோம் என கூறினார்.

error: Content is protected !!