India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று(28.5.24) பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை
புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய மூன்றாவது மனிதவள மேலாண்மை உச்சி மாநாடு 2024-இல், பொது மற்றும் பெரிய நிறுவனங்கள் பிரிவின் கீழ் சிறந்த மனிதவள நடைமுறைகளுக்கான வெற்றியாளராக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஸ்கோர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மனித வள தலைமை பொது ராஜரத்தினம் பெற்று கொண்டார்.
டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் (20). இவர் ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக அப்பகுதியை சேர்ந்த அப்பாஸ் (28) என்பவர் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து இஸ்ரவேல் மற்றும் அவரது காதலியை வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் டி.பி சத்திரம் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
சென்னையில் பார்த்தசாரதி பெருமாள் கோயில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோயிலாகும். திருவல்லிக்கேணியிலுள்ள இக்கோயிலின் கோபுரங்களும், மண்டபங்களும், சிற்ப கலையில் சிறந்து விளங்குகிறது. இக்கோயில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. இக்கோவிலில் பெருமாளின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. மிகப் பழமையான இக்கோயிலின் மேல் 12 ஆழ்வார்கள் பாடல் இயற்றியுள்ளனர்.
கோவை மருத்துவ கல்லூரி மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் சரணிதா. ஒரு மாத பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோரை முதற்கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இது மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் கட்டத்தில் நடைபெற்றது.
சென்னை, வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி உதயகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நேற்று தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் உதயகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை: தி.நகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று (மே.26) வழக்குப்பதிவு செய்துள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ததாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் எம்எல்ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.