Chennai

News May 29, 2024

போதை மாத்திரைகள் பறிமுதல்- சிறுவன் உள்பட 6 பேர் கைது

image

அம்பத்தூர், ஐ.சி.எப் காலனி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போதை மாத்திரை விற்பனை செய்த நபர்களிடமிருந்து 1600 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதீஷ் (18), தனுஷ் (21), யோகராஜ் (21), விக்னேஷ் (23), அஜித் (20) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News May 29, 2024

சென்னை: யூடியூப் பேட்டியால் தற்கொலை முயற்சி!

image

சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யூடியூப் சேனலுக்கு காதல் தொடர்பாக கொடுத்த பேட்டியை, அவரது அனுமதி இல்லாமல் அந்த சேனல் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்  அளித்த புகாரின் பேரில் 3 பேரை போலீசார் நேற்று(மே 28) கைது செய்துள்ளனர்.

News May 28, 2024

சென்னையில் விபத்து: பெண் பலி

image

தாம்பரம் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார் (30). இவரது மனைவி அமுதா (27). நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே‌ வந்த போது அங்கு உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து பைக்கில் வந்த 2 பேர் இவர்கள் மீது மோதி விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அமுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 28, 2024

பார்ட்டிக்கு வரவழைத்து ரூ.50 லட்சம் பறிப்பு 

image

பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்திருப்பவர் ஜாவித் சைபுதீன்(32). இவரிடம் பெண் ஒருவர், இரவு பார்ட்டிக்கு அழைத்ததின் பேரில் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஒரு கும்பல் கடத்தி, ரூ.50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என மிரட்டியதால், இவர் அந்த கும்பலிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்து தப்பி வந்துள்ளார். புகாரின் பேரில், சோனியா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

News May 28, 2024

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவர் கொலை

image

குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (50). அதே பகுதியைச் சேர்ந்தவர் சபரி (30). இவர் ரூ.28000 பணத்தை தாமஸிடம் வாங்கியுள்ளார். பின்னர் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணத்தை சபரியிடம் தாமஸ் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது தாமசை, சபரி அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சபரியை இன்று கைது செய்தனர்.

News May 28, 2024

6 மாதமாக சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை

image

சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 16 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் அண்ணன் முறை கொண்ட சிறுவன், அவனது நண்பன், டெய்லர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 மாதமாக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக, சிறுமியின் சித்தி மூலம் இச்சம்பவம் வெளிவந்துள்ளது. பெற்றோர் மதுவுக்கு அடிமையானதால் சிறுமியை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

News May 28, 2024

ரயில் சேவையில் இன்று மாற்றம்

image

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று(28.5.24) பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 28, 2024

கல்லூரியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை உயர்வு

image

சென்னை புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

News May 27, 2024

புதுமைப்பெண் திட்டம் மாணவிகள் 34% உயர்வு!

image

சென்னை
புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

News May 27, 2024

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விருது

image

தமிழ்நாடு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய மூன்றாவது மனிதவள மேலாண்மை உச்சி மாநாடு 2024-இல், பொது மற்றும் பெரிய நிறுவனங்கள் பிரிவின் கீழ் சிறந்த மனிதவள நடைமுறைகளுக்கான வெற்றியாளராக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஸ்கோர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மனித வள தலைமை பொது ராஜரத்தினம் பெற்று கொண்டார்.

error: Content is protected !!