India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பெருநகரில் கடந்த 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை நேற்று(ஜூன் 10) தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி மே.27 – ஜூன் 9 வரையான வாரகாலத்தில் 1 பெண் உட்பட 66 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் கடந்த 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த மே.27 முதல் ஜூன் 9 வரையான வாரகாலத்தில் 1 பெண் உட்பட 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அலியான்ஸ் பிரான்சே அமைப்புடன் இணைந்து பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பின், விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், சில இடங்களில் காற்று பலமாக வீசி வருகிறது. இந்நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே வானவில் தோன்றியது. இதனை அப்பகுதியில் செல்லும் மக்கள் பார்த்து ரசித்தவாறு செல்கின்றனர். சிலர் அதனை தங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “காலம் உள்ள வரை கலைஞர்” என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இப்புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
மின் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் கீழ்காணும் பகுதிகளில் நாளை (ஜூன் 11) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, வேளச்சேரி, எழில் நகர், திருவொற்றியூர், ஐஐடி, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற நவீன கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு, நீலகிரி எம்பி ஆ.ராசா, கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு புறப்படும் முன் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் கழித்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது ஒரு சாதனை. இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்பதற்காக நான் டெல்லி செல்லவுள்ளேன்” என்றார்.
அண்ணா சாலையில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர் அன்பு(27). இந்நிறுவனத்தில் 5 டெம்போ வாகனங்களை யோகேஸ்வரன் வாங்கியுள்ளார். கடந்த 3 மாதமாக தவணை தொகை கட்டவில்லை. எனவே கொடுங்கையூர் காமராஜர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்ய சென்ற அன்பு உள்ளிட்டோரை யோகேஷ்வரன் மற்றும் அவரது ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து மாநில கட்சி அந்தஸ்தை பெறக் காரணமான மக்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வெற்றி இலக்கை அடைய முடியாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றதில் மகிழ்ச்சி. இதை தக்கவைத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க உறுதியேற்போம் ” என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.