Chennai

News June 2, 2024

சென்னை: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

image

திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தையை தாய்- தந்தை இருவரும் வேலைக்கு செல்வதால் கீழ் வீட்டில் உள்ள வினோத் என்பவரிடம் விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று குழந்தைக்கு வினோத் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரில் போலீசார் வினோத்தை கைது செய்தனர். 3 வயது குழந்தைக்கு நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 2, 2024

கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்: டி.ஜெயக்குமார்

image

மயிலாப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் கருத்து கணிப்புகள் பொய்யாகும். கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தார். மேலும் மத்தியில் எந்த கட்சி அமைந்தாலும் தமிழ்நாட்டுக்கான உரிமையை அதிமுக தான் பெற்றுத்தரும் என்றார்.

News June 2, 2024

சென்னையில் இருந்து 120 விமான சேவை ரத்து

image

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டெல்லி, ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் வருகிற 10-ஆம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இதனால் பத்து நாட்களுக்கு, சுமார் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News June 2, 2024

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

சென்னையில் வாக்குகள் எண்ணப்படும் அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களிலும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் ஒவ்வொரு மையத்திலும் இணை ஆணையர் ஒருவரின் மேற்பார்வையில் 3 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

News June 2, 2024

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடந்த கொடுமை

image

‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிளாஸ்டர் பாரிஸால் செய்யப்பட்ட கமல் உருவங்களை தலையில் தாங்கிக் கொண்டு நிற்க மனிதர்களை பயன்படுத்தியுள்ளனர். மேலும், 4 மணியிலிருந்து ரசிகர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில்கூட வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 2, 2024

சிறுவனை கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு

image

சென்னை: புழல் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த கிளியோபஸ் ஜெரால்டு(12) என்பவரை, இவரது பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வந்த 2 நாய்கள் கடித்தது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் படி, நாயின் உரிமையாளர் ஜான் பெட்ரிக்ஸ் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News June 2, 2024

கார் மீது பைக் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

image

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோகித். இவரது நண்பர் ஷாம்ரவி. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டர் சைக்கிளில் பள்ளிக்கரணை கைவேலி மேம்பாலத்தில் 2 பேர் சென்ற போது, மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது திடீரென மோதியது. 2பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News June 2, 2024

ஆளுநர் மாளிகையில் தெலுங்கான உருவான தின விழா

image

தெலங்கானா உருவான தின விழா ஆளுநர் மாளிகையில் நேற்று (ஜுன்.1) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிறந்த நிர்வாகம் மற்றும் நல்லாட்சிக்காக மாநிலங்களின் தோற்றம் எப்படி இருந்தன என்பது குறித்து விவாதித்தார். இதனையடுத்து பாரம்பரிய நாட்டுப்புற கலையான, கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட உணர்வுபூர்வ ஒக்கு டோலு நடனம் நடைபெற்றது. இது பார்வையாளர்களை முற்றிலும் மெய்சிலிர்க்க வைத்தது.

News June 1, 2024

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து!

image

சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸின் இரு விமானங்கள் இன்று போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத வெப்ப அலை டெல்லியில் வீசுவதால் டெல்லிக்கு பெரும்பாலான பயணிகள் செல்வதை தவிர்த்து வருகின்றனர். முன்பதிவு செய்த பயணிகள் வேறு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்க இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 1, 2024

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்

image

கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய தீர்வை எட்டும் வகையில் மேம்பாலம் கட்ட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரே ஜிஎஸ்டி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!