India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 மக்களவைத் தேர்தல் மத்தியசென்னை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 3,01,520 (38.52%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் தயாநிதி மாறனும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பார்த்த சாரதியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
2019 மக்களவைத் தேர்தல் வட சென்னை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி 4,61,518 (48.44%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் ராயபுரம் மனோவும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
2019 மக்களவைத் தேர்தல் தென்சென்னை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் 2,62,223 (23.34%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
சென்னையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையான லைசென்ஸ் வாங்குவது கிடையாது. சென்னையில் ஒரு மாதத்தில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நாயை நாய் எனக் கூற விடாமல் குழந்தை என்கிறீர்கள். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா?” என கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் இன்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன் மாதவரத்தில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து, 18குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அரும்பாக்கத்தில் தாய்ப்பால் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான தவறுகளும் நடக்க வாய்ப்பு அளிக்காமல், முகவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். மேலும், காலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை, வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
காசிமேடு சிக்னல் அருகே கூடுதல் ஆணையரின் தனிப்படையை சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீதருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கார்த்திக், குமாரவேலு (ம) 2 சிறுவர்கள் சட்டவிரோதமாக மது விற்பதை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறை அடைத்தனர். மேலும், 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.
சென்னை ஒஎம்ஆர் சாலை முடிவில் சிறுசேரியில் மிக பிரம்மாண்டமான அலுவலகத்தை டிசிஎஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. அதே பகுதியில், மேலும் ஒரு அலுவலகத்தை அந்நிறுவனம் கட்டி வருகிறது. ரூ.876 கோடி மதிப்பீட்டில் சுமார் 33.4 லட்சம் சதுர அடி பரப்பளவில், 11 மாடிகள் கொண்ட 3 கட்டடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.