India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்தவர் லெனின் சுந்தர் (55), கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், வடசென்னை சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஆவார். இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது குடும்பத்தினர் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானம் செய்ய முடிவெடுத்தனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 28) அவரது உடல் தானம் செய்யப்பட்டது.
மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவுறுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கடலூரில் தொழிலாளர்கள் சாக்கடைகளில் மூழ்கி சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்படத்தக்கது. ஷேர் பண்ணுங்க.
கொட்டிவாக்கம் சுவாமி நாதன் நகரைச் சேர்ந்தவர் பழனி (44). இவர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கோயில் கோபுரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று (ஜூலை 29) ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 – ரூ.36க்கும், சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.80க்கும், தக்காளி ரூ.20 – ரூ.30க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 – ரூ.50க்கும், சவ் சவ் ரூ.25 – ரூ.28க்கும், முள்ளங்கி, முட்டைக்கோஸ் ரூ.20 – ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ.35 – ரூ.40க்கும், இஞ்சி ரூ.125 – ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என செல்போன் எண்ணுக்கு வரும் குறுஞ்செய்திகளை பொருபடுத்த வேண்டாம் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. முதலில் தங்களின் கட்டண நிலையினை மின்வாரிய வலைதளம் அல்லது செயலியில் சரிபார்த்துக்கொள் என்று வரும் குறுஞ்செய்தியின் எண்ணை அழைக்கவோ அல்லது அதற்கு பணம் செலுத்தவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வந்தால் சைபர் குற்ற எண் 1930-ஐ அழைக்கவும்.
சென்னையில் நாளை (ஜூலை 30) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தி.நகர், நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், திருமூர்த்தி நகர், அடையாறு, இந்திரா நகர், வேளச்சேரி, போரூர், குமணன் சாவடி, மதுரவாயல், வானகரம், சேத்துப்பட்டு, ஆர்.வி நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சாதனை பட்ஜெட் விளக்கும் விதமாக பொதுகூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் மாநில துணைத் தலைவர் கருநாகராஜன் பேசியது :- சாராய படுகொலை திசை திருப்பவே மெட்ரோ, நீட் போன்ற திட்டங்களை கையில் எடுக்கிறார்கள். திமுக கட்சிக்கு எதிராக 3 குற்ற வீடியோ பைல் வெளியிட்டோம். அதற்கு நீங்கள் மறுத்து பேச யாரும் தயாராக இல்லை என பேசினார்.
சென்னையில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (டிட்டோ ஜேக்) மாநில அமைப்பு மயில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்: அவர் தெரிவிக்கையில், ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 3 நாட்கள் சென்னை டி.பி.ஐ. கல்வி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில், சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட பாமக இன்று சமூக நீதிக்காக செயல்படுகிறதா எனவும், 2011ல் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினோம். ஆனால் 2021ல் மோடி அரசு ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. இதை பாமக நிறுவனர் மோடியிடம் கேட்பாரா? பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா என்றார்.
சென்னை வடபழனியில் 4ஆவது மாடியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி வீடியோ கால் பேசிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுவன், தான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார் என தனது பெண் தோழிக்கு காட்ட வீடியோ கால் பேசிய போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அச்சிறுவன் உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.