India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இடைநிலைபள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட ஆசிரியர்கள் வரும் வழியிலேயே ஆங்கங்கே கைது செய்யப்பட்டனர். அதன்படி, தற்போது வரை 1500-க்கும் அதிகமான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் விரைந்து முடிக்கப்படும் எனவும், அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதனை ஏற்படுத்தி கொடுக்க தயாராக உள்ளோம் என கூறினார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுவதுமாக முடித்து, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார் இந்நிகழ்வில் ஏம்எல்ஏ எழிலன் நாகநாதன், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை சென்னையில் மொத்தம் 796 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 22 -ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 7 நாட்களில் 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில நாட்களாக வீட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகர் இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது வைகோவின் உடல்நிலை குறித்து முத்தரசன் கேட்டறிந்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, “தமிழகம் கொலை மாநிலம் அல்ல, கலை மற்றும் அறிவுசார் மாநிலம். சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம்.
ஆட்சியுடன் தொடர்புடைய கொலைச் சம்பவங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலேயே இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது” என கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. BSP கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், இதுவரை 20 பேர் கைதாகியுள்ளனர். இவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம், கொலைக்கு தரப்பட்ட பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு பூ சந்தையில், ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரோஜா பூ ரூ.150, மல்லி ரூ.700, சாமந்தி பூ ரூ.300, சம்பங்கி பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.2000, முல்லை ரூ.600, அரளி பூ ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.140 ரூ.140, சாக்லேட் ரோஜா ரூ.180 விற்பனை செய்யப்படுகிறது. வரத்துக் குறைவு காரணமாக பூக்களின் விலை அதிகரித்து வருகிறது.
சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வரும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. 31 அம்ச கோரிக்கைளை வலுயுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து, தமிழகம் முழுவதும் இருந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்க குவிந்தனர். அப்போது, ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்தவர் லெனின் சுந்தர் (55), கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், வடசென்னை சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஆவார். இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது குடும்பத்தினர் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானம் செய்ய முடிவெடுத்தனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 28) அவரது உடல் தானம் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.