India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
18 ஆவது மக்களவைத் தேர்தலில், சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று தலைநகரை தக்கவைத்துள்ளனர். வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,72,985 வாக்குகளும், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 3,43,294 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் 4,06,292 வாக்குகளும் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 3,86,114 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 1,58,948 வாக்குகளும், தேமுதிக(அதிமுக) வேட்பாளர் பார்த்தசாரதி 67,728 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 3,01,959 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 1,86,154 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் 99,561 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர்.
18 ஆவது மக்களவைத் தேர்தலில், 22வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 3,28,696 வாக்குகளும், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 1,79,571 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் 2,66,645 வாக்குகளும் பெற்று வெற்றியின் விளிம்பில் உள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் வெற்றி குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது.
பாஜக மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முன்னாள் எம்பி ஜெயவர்தன் ஆகியோர் 18 ஆவது மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் களமிறங்கினார். இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தமிழிசையை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் தமிழச்சி முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியில் திமுக அதிமுக முறை கோலோச்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், 3.30 மணி நிலவரப்படி வடசென்னை தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 2,25,779 வாக்குகள் பெற்று 1,53,597 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக வெற்றி முகத்தில் உள்ளார். 72,182 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் மனோகர் 2 ஆம் இடத்தில் உள்ளார்.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூன் 4) நடைபெற்று வருகிறது. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை, தேனாம்பேட்டை அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்குகள் பெற்று 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி, “தேர்தலில் வெளிவரும் முடிவுகளால், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. 3 வருட திமுகவின் நல்லாட்சிக்கான அங்கீகாரத்தை மக்கள் அளித்துள்ளார்கள்” என்றார்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், 2 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 1,37,318 வாக்குகள் பெற்று ஏறுமுகத்தில் உள்ளார். பாஜக வேட்பாளரான வினோஜ் பி.செல்வம் 64,269 வாக்குகள் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். 23,544 வாக்குகளுடன் தேமுதிக வேட்பாளர்(அதிமுக கூட்டணி) 3 ஆவது இடத்தில் உள்ளார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில், 2 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 1,04,927 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் 66,885 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 34,300 வாக்குகளும் பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.