Chennai

News June 18, 2024

இதுவரை ரூ.43.05 லட்சம் அபராதம் வசூல்

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்தியும் காயப்படுத்தியும் வருகின்றன. இதனைத் தடுக்க மாநகராட்சி அந்த மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை 1117 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.43.05 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

சென்னையில் நாளை இங்கு மின்தடை

image

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நாளை(19.6.24) பல்வேறு பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், வியாசர்பாடி, எழும்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 18, 2024

விமானம் புறப்படும் நேரம் மாற்றம்

image

சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் இன்று இரவு 11 மணிக்கு துபாய் புறப்படும் என அறிவித்துள்ளனர். சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் விமானம் புறப்பாடு தாமதமானது. இதனால் விமானப் பயணிகள் 15 மணி நேரத்திற்கு மேல் உரிய வசதிகளின்றி காத்திருக்கப்பட்டிருப்பதால், அவதி அடைந்து வருகின்றனர்.

News June 18, 2024

சிறுவனிடம் நலம் விசாரித்த மேயர் பிரியா

image

மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் நேற்று இரவு 6 வயது சிறுவனை தெருநாய் கடித்தது. இதில் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அச்சிறுவனை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அச்சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.

News June 18, 2024

சென்னையில் நாளை மின்தடை

image

சென்னையில் நாளை(19.06.2024) பல்வேறு பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 18, 2024

சென்னை: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

image

சென்னை மயிலாப்பூரில், 6 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொச்சிக்குப்பம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன், அங்குள்ள நாய்களுக்கு பிஸ்கெட் போட்டுள்ளான். அதை சாப்பிட்ட தெரு நாய்கள், திடீரென சிறுவனை தோள்பட்டை, தலை, கால், கைகளில் கொடூரமாக கடித்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

News June 18, 2024

பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அசோக் நகர், அண்ணா நகர், தண்டையார்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் இடைவிடாமல் பெய்த மழை, அதிகாலை வரை தொடர்ந்தது. இதனால், விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தாமதமானது.

News June 17, 2024

சொத்து வரி செலுத்தாதவர்களின் பட்டியல் வெளியீடு

image

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவர்களால், மக்களுக்கான வளர்ச்சி பணி பாதிக்கிறது. சிலர் ₹7 லட்சம் முதல் ₹2 கோடி வரை நீண்டகாலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். சொத்து வரி நிலுவை வைத்திருப்போரில், அதிகபட்ச நிலுவைத் தொகை அடிப்படையில் முதல் 100 பேர் பட்டியல் தற்போது சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News June 17, 2024

மூத்த குடிமக்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் கட்டணம் இன்றி செல்வதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணம் இன்றி பயணம் செய்ய வருகின்ற 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 42 பணிமனைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. இதை வாங்க ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் (ம) 2 புகைப்படங்களை அளித்து பெற்றுக் கொள்ளலாம்.

News June 17, 2024

“பெண்ணை முட்டிய மாட்டுக்கு யாரும் உரிமை கோரவில்லை”

image

சென்னை, திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவொற்றியூரில் நேற்று பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கி 50 மீட்டர் இழுத்துச் சென்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாடு பிடிக்கப்பட்டு பெரம்பூர் கால்நடை பராமரிப்புக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!