Chennai

News July 30, 2024

மாடுகளுக்கான அபராதம் அதிகரிப்பு

image

சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை, மாநகராட்சி சார்பில் எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் வளாக கட்டட கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், சென்னையில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த விதிக்கப்படும் அபராதம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வசூலிக்க தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளது.

News July 30, 2024

சென்னையில் காய்கறி விலை குறைவு

image

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்தது. ஆனால், இன்று தக்காளி ரூ.35க்கும், கேரட் ரூ.100க்கும், வெங்காயம் ரூ.30க்கும், உருளைகிழங்கு ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.45க்கும், எலுமிச்சை பழம் ரூ.120க்கும் என அனைத்து காய்கறி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு காய்கறிகளின் விலை 5 முதல் 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.

News July 30, 2024

போதைப்பொருட்கள் பறிமுதல்: இ.பி.எஸ். கண்டனம்

image

சென்னையில் ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள், நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய இ.பி.எஸ்., விளம்பர வசனம் மட்டும் பேசும் திமுக அரசு, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் செயலற்ற ஆட்சியாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம். போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

தயாரிப்பாளர் ரவீந்திர சந்திரசேகர் வீட்டில் ரெய்டு

image

அசோக் நகர் 19ஆவது அவென்யூ பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக புகார் வந்தது. இதனை அடுத்து, தற்போது அவரது வீட்டிற்கு அதிகாலையில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், நீண்ட நேரமாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சோதனை முடிந்த பிறகு, விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 30, 2024

சென்னையில் பிரபல கூலிப்படை தலைவன் கைது

image

சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற ஆர்.டி.ஆர் பாலாவை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், அசோக் நகரில் கடந்த 2021இல் நடந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் 2023 டிசம்பர் மாதம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த நிலையில், தற்போது ஆர்.டி.ஆர். பாலாவை, போலீசார் கைது செய்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 30, 2024

சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை

image

சென்னையில் நாளை (ஜூலை 31) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், வேளச்சேரி, அடையாறு, பெசன்ட் நகர், காந்தி நகர், சாஸ்திரி நகர், திரிசூலம், வியாசர்பாடி, இந்திரா நகர், ஷர்மா நகர், கல்யாண புரம், சத்திய மூர்த்தி நகர், ஆவடி, பட்டாபிராம், ஷேக்காடு, தாம்பரம், ரங்கா நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க.

News July 30, 2024

சென்னையில் F4 கார் பந்தயம்

image

சென்னையில் ஃபாா்முலா 4 காா் பந்தயம், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. கடந்தாண்டு மழை மற்றும் வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு போட்டி நடத்தப்படுகிறது. தெற்கு ஆசியாவில் முதல் முறையாக, இரவு நேரத்தில் பாா்முலா 4 காா் பந்தயம் நடைபெற உள்ளது. இப்பந்தயம், தீவுத்திடலில் தொடங்கி 3.5 கி.மீ சுற்றளவில் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியா் பாலம் வழியாக தீவுத்திடலைச் சென்றடையும்.

News July 29, 2024

வங்காளதேச குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றி

image

வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தைக்கு பிறவியிலேயே முதுகுத்தண்டு வளைந்த நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பான முறையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையின் இயக்குநரும் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதர் முன்னிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது குழந்தை ஓடி விளையாடுவதால், குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 29, 2024

சென்னையில் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

சென்னை மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் இருக்கும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டு உள்ளது. காவல் மாவட்டங்கள் வாரியாக இந்த தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 29, 2024

முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினை வெளியீடு

image

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) வெளியிட்டார். இதில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!