India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு (ம) புதுச்சேரியில் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக – பாஜக கூட்டணி இருந்தால் 35 தொகுதிகளை வென்று இருக்கலாம் என எஸ்பி வேலுமணி பேசியது, அனுமானத்தின் அடிப்படையிலான அவரது சொந்த கருத்து. பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. தோற்றுக் கொண்டே இருக்கும் RCB அணி போலதான் தமிழ்நாட்டில் பாஜக” என விமர்சித்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். இதனையடுத்து இன்று சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். இந்நிகழ்வின் போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உட்பட பலர் உடன் இருந்தனர்.
சென்னை: ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் தனியார் நெட்வொர்க் சார்பில் வயர் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் சங்கர் விஷ்வாஷ் (42), சுதாகர் (41), கார்த்திகேயன் (22) ஆகியோர் வயர் பதிப்பதற்காக பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்தது. இதில் 3பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் டிஎச் சாலையில் நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது, பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி வந்த பேருந்து மோதியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் இறந்தவரின் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் அகஸ்டின் பால். இவர் தனது மனைவியின் 25வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதற்காக வீடு முழுவதும் அலங்காரம் செய்ய நேற்று(ஜூன் 6) சீரியல் லைட் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தம்பதிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், மனைவி கண்முன்னே கணவன் உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் நேற்று(ஜூன் 6) மாலை ராயபுரம் ஐட்ரீம் திரையரங்கம் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தி உள்ளார். இவருக்கும் அங்கு குடித்துக் கொண்டு இருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் தலையில் பாட்டிலால் அந்த நபர்கள் குத்தி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆலந்தூர், சென்னை வி.நி, மீனம்பாக்கம், டிஜிபி அலுவலகம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும், என்னூர், பெருங்குடி மற்றும் தேனாம்பேட்டையில் ஓரிரு இடங்களிலும் 5 செ.மீட்டரும், அண்ணா பல்கலை, அடையார், புழல், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
சென்னை ‘லிங்கன் புக் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கணுவுக்கு ‘வலிமையான சமுதாயத்தை உருவாக்கிய நீண்ட வரலாறு கொண்ட அரசியல் தலைவர்’ என்ற விருதை வழங்கியது. 1924ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பிறந்த நல்லக்கண்ணு, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதில் இருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் போராட்டங்களை முன் நின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.