Chennai

News June 16, 2024

பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்

image

நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் விஐடி வேந்தர் முனைவர் கோ விஸ்வநாதனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை பாராட்டும் விதமாக இன்று சைதாப்பேட்டை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு உரையாற்றினார்.

News June 15, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

image

சென்னை துறைமுகம் பகுதியில் சாலையோர வியாபாரிகள் வைத்திருந்த கடைகளை சென்னை மாநகராட்சி சமீபத்தில் அகற்றியது. இந்த நடவடிக்கையின் காரணமாக வியாபாரி கிருஷ்ணவேணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சாலையோர வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

News June 15, 2024

திமுக – காங்கிரஸ் உறவு தொடர்கிறது

image

சென்னை திமுக – காங்கிரஸ் உறவில் விரிசல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும், “தேர்தலில் திமுக வெற்றி பெற காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும். திமுகவை எதிர்த்து போட்டியிடும் கட்சிகள் டெபாசிட் இழக்கும்” என்று கூறினார். இதனால், திமுக – காங்கிரஸ் உறவு சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

News June 15, 2024

பணமில்லா பரிவர்த்தனை அரசு பேருந்துகளில் 100% அமல்

image

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில், பணமில்லா பரிவர்த்தனை 100% பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மதுரை, தூத்துக்குடி, கோவை, உள்ளிட்ட நகரங்களுக்கு சென்னையிலிருந்து 1,100க்கும் மேற்பட்ட பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் கூகுள்பே, போன்பே வாயிலாக டிக்கெட் பெறும் வசதி மே மாதம் சோதனை முறையில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

News June 15, 2024

சென்னை: திமுக நிர்வாகி மீது குஷ்பு புகார்

image

முன்னாள் ஆளுநர் தமிழிசையை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற காணொளி வெளியானது குறித்து அண்மையில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கிண்டலாக பேசியிருந்தார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தனது X தளத்தில் இதை குறிப்பிட்டு, “தமிழிசை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்காக வழக்குத் தொடருவேன். ஏற்கெனவே மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

சென்னையில் இன்று மின்தடை

image

சென்னையில் மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று(15.6.24) பல்வேறு பகுதியில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, போரூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சோழிங்கநல்லூர், கே.கேநகர், ஐடிசி, மாதவரம், வியாசர்பாடி, சிறுசேரி ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடித்தால், மின்விநியோகம் கொடுக்கப்படும் என்றனர்.

News June 15, 2024

3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

image

புளியந்தோப்பு ஸ்ட்ரகான்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளது. இதனால், அச்சாலையில் இன்று(15.6.24) முதல் 17ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், பெரம்பூர் பேரக்ஸ்சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அம்பேக்கர் கல்லூரி சாலை ஆகிய சாலைகளில் இருந்து ஸ்ட்ரகான்ஸ் சாலை வந்து செல்வதற்குதடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் நியூ பெரன்ஸ்சாலை, செல்லப்பாதெரு வழியாக செல்லலாம்.

News June 15, 2024

சென்னையில் ஐம்பெரும் விழா

image

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

News June 14, 2024

தமிழ் பாடத்தில் 100/100 பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

image

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

News June 14, 2024

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உடன் சோதனை செய்து வருகின்றனர். போலீசார், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள், அங்கு கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!