India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியின் நூற்றாண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டி அளித்த அவர், கேரளா நிலச்சரிவிற்கு ரூ.10 லட்சம் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கி உள்ளது. மக்களின் உயிரையும், உடைமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசியல் செய்யக்கூடாது என்றார்.
குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டுமென காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது குறித்து 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இந்த 3 சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை, டி.பி சத்திரம் மற்றும் ஜெ.ஜெ நகரில் ரூ.3 கோடியே 70 லட்சத்து 14 ஆயிரம் செலவில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இன்று அவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா இருந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை வாசிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,01,182 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணம் செய்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர், உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தொழில்வரியை உயர்த்திய சென்னை மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள சசிகலா, வரியை உயர்த்தியது ஏழை, எளிய சாமானிய மக்களை அழிக்கும் செயல் என விமர்சனம் செய்துள்ளார். திமுகவின் மக்கள் விரோத செயலுக்கு துணை நிற்கும் சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ள, தொழில்வரி, உரிமம் கட்டணம் உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “முதல்வர், நிதி ஆயோக் கூட்டத்தை முழுமையாக எதிர்க்கிறோம் என தெரிவித்திருக்க வேண்டுமே தவிர, கூட்டத்திற்கு செல்லாமல் இருப்பது அடம் பிடிப்பது போல் உள்ளது. அதிமுக ஆட்சியில் 10 – 15% கொலைகள் நடந்தால், திமுக ஆட்சியில் 100% கொலைகள் நடக்கிறது” என்றார். உங்கள் கருத்து?
சென்னை மாநகராட்சி பகுதிகளை தூய்மைப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த பணி மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சாலையில் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றுவது, அருந்த கேபிள் வயர்களை அகற்றுவது, மின்விளக்குகளை சரி செய்வது, சாலையை சீரமைப்பது, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.