Chennai

News June 22, 2024

சென்னையில் கூடுதல் வார்டுகள் – அமைச்சர்

image

சென்னையில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(ஜூன் 22) தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 200 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 40,000 பேர் கூடுதலாக வசிப்பதாக தெரிவித்த அமைச்சர், வார்டுகள் மற்றும் மக்கள் பிரிதிநிதிகளின் எணிணிக்கையை அதிகரிப்பது குறித்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

News June 22, 2024

மெரினாவில் போராட்டம்?..தீவிர பாதுகாப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து, போராட்டங்களை மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

News June 22, 2024

‘அரியர்’ வைத்ததை கண்டித்த தாய்-தம்பி கொலை

image

திருவொற்றியூர், திருநகர் பகுதியை சேர்ந்த முருகன்(குவைத்) – பத்மா தம்பதியின் மகன்கள் நித்திஷ், சஞ்சய். இவர்களது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. அதன்படி, போலீசார் சென்று பார்த்ததில் பத்மா – சஞ்சய் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து நித்திஷை இன்று கைது செய்து விசாரித்ததில், 14 அரியர் வைத்திருந்ததை கண்டித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News June 21, 2024

விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்டுள்ளார். விமானப் படை தேர்வு, இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் 8.7.2024 முதல் 28.7.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

News June 21, 2024

பெண்ணை முட்டிய மாடு: தந்தை, மகன் கைது

image

திருவொற்றியூரில் பெண்ணை முட்டி படுகாயம் ஏற்படுத்திய எருமை மாட்டின் உரிமையாளர்களான தந்தை, மகன் இருவரை போலீசார் கைது செய்தனர். கோமாதா நகர் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ், மகன் வெங்கல சாய் ஆகிய 2பேர் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து வந்த மாடுகளை இறக்கும் போது தப்பியோடிய மாடு, பெண்ணை முட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் 2பேர் மாடுகளை வாங்கி வந்து கமிஷனுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்பவர்கள்.

News June 21, 2024

சென்னையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆலந்தூரில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்த முகாமில், 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில், 20க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்து கொள்ள உள்ளனர்.

News June 21, 2024

சென்னையில் காற்றுடன் கனமழை

image

கடந்த 2 நாள்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, நேற்றிரவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. அடுத்த 48 மணி நேரத்துக்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 20, 2024

சென்னையில் கனமழை

image

சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று(20.6.24) கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி, நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தி.நகர், ஆலந்தூர், கிண்டி, ஆலந்தூர் அடையாறு, உள்பட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 20, 2024

நாளை நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

image

INDIA கூட்டணி சார்பில் நாடுமுழுவதும் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை (21.6.2024) மாலை 3.00 மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News June 20, 2024

சென்னையில் வழக்கத்தை விட அதிக மழை

image

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பகலில் வெயில் கொளுத்தி வந்தாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஜூன் 1 முதல் 19ஆம் தேதி வரை வழக்கத்தை விட 339 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் 36.6 மி.மீ மழை பதிவாகும், ஆனால் இந்தாண்டு 173.8 மி.மீ மழை பெய்துள்ளது.

error: Content is protected !!