India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகரில் நாளை முதல் 100 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 100 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் நாளை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்குக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.exam.unom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். மத்திய வருவாய் புலனாய்வு துறை முதன்மை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், சுங்கத்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் 7 பேரும் மாற்றப்பட்டனர். சமீபத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல் விசாரணை நடந்து வரும் நிலையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அடையாறு இல்லத்தில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி அமமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். மேலும், புதிதாக அமமுகவில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் இன்று பேசிய அவர், ஆளுநருக்கு மீண்டும் பதவி வழங்குவது மத்திய அரசின் நிலைபாடு என்றார். பிரதமர் அரசியலமைப்பு படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறார். ஆனால், வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 3) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, ராயபுரம், தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் மழை பெய்தது.
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக தமிழ் யூடியூபர் இர்பானுக்கு சென்னை போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். மேலும், சரியான நம்பர் பிளேட் இல்லாததற்கும் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். சமீபத்தில், நடிகர் பிரசாந்தும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விதிகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து போலீசார் கவனித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள தபால் நிலையங்களில், தபால் வரிசைப்படுத்துதல் பிரிவில் (Sorting Division)- 2, தென் சென்னை – 11, வடசென்னை – 3, மத்திய சென்னை – 1 என மொத்தம் 17 காலிப் பணியிடங்கள் உள்ளன. 10ஆம்வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நாளை மறுநாளுக்குள் (ஆகஸ்ட் 5) <
கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவை, சுமார் ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) நடந்த திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர், ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு-2024 அறிக்கையும் வெளியிட்டுள்ளார். மேலும், 9 நவீன வாகனங்களையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த கோகிலா (39), அதிமுக மகளிர் அணி பகுதி செயலாளரும், பிரபல ரவுடி ஜான் கென்னடி மனைவி ஆவார். இவரிடம், கடந்த 27ஆம் தேதி வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதுடன், அவரது சங்கை அறுக்காமல் விடக்கூடாது என புதுப்பேட்டையை சேர்ந்த அதிமுக மகளிர் அணி 63ஆவது வட்ட செயலாளர் வாணி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வாணியை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.