India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல நாட்டிய பேரொளி யாமினி கிருஷ்ணமூர்த்தி, நேற்று (ஆகஸ்ட் 3) உடல்நலக் குறைவால் காலமானார். டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திராவைச் சேர்ந்த இவர், சென்னையில்தான் பரதநாட்டியம் கற்றுக் கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார். சென்னையில் வாழ்ந்து வளர்ந்த அவர், பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 4) காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவதாகவும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்ததையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. உங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, கிரிக்கெட் விளையாடியது, சினிமாவிற்கு சென்றது என பல சுவாரஸ்யமாக விஷயங்களை செய்திருப்போம். சினிமாவை மிஞ்சும் அளவுக்குகூட சில சேட்டைகளை செய்திருப்போம். அந்த வகையில், உங்கள் நண்பனுடனான நினைவுகளை கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க. ‘HAPPY FRIENDSHIP DAY’
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள், இம்மாதத்தில் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, சென்னையில் உள்ள 2,067,695 அட்டைதாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.
மண்ணடி லிங்கி செட்டி தெருவில் நவாஸ்கான் என்பவரை கத்தியால் வெட்டி, ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். பின்னர், அவரிடம் இருந்த ரூ.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில், மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்து சேவை இன்று (ஆகஸ்ட் 4) முதல் தொடங்கப்பட உள்ளன. சக்கர நாற்கலியுடன் எற இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாலையில் இருந்து பேருந்தில் ஏறும் உயரம் குறைவாக இருக்கும். தாழ்தள உயரத்தை இடதுபுறம் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்க ‘KNEELING’ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வேகத்தடை இல்லாத பிரதான சாலைகளில் மட்டுமே இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
8 அணிகள் இடையிலான 8ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் TNPL இறுதிப் போட்டியில் கோவை- திண்டுக்கல் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நாளை சென்னை வருகிறார்.
சென்னையில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு பார் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மதுபானக் கூடங்களின் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட மதுவிலக்குத் துறை உத்தரவிட்டுள்ளது. ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ், ஹையத் ரீஜன்சி, தி பார்க் உள்ளிட்ட பார்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில் அண்ணாநகர் மண்டலம், செனாய் நகர், திரு.வி.க. பூங்காவில் நடைபெற்ற பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இன்று மேயர் பிரியா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய வட்டார துணை ஆணையாளர் ஜெ.பிரவீன் குமார், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் இராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் வைர விழா சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசுக்கும், மக்களுக்கும் பலமாக இருப்பது வருவாய்த்துறை எனக் கூறினார். மேலும் 1.16 கோடி மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 சென்று சேருகிறது என்றால் அதற்கு பின்னால் வருவாய் துறை அதிகாரிகள் அலுவலர்கள் உழைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.