India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக ஏ.அருண் பொறுப்பேற்றார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி. அவர்களுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவர் வகித்து வந்த சட்ட ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு மற்றும் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 10, 12, டிப்ளமோ, கலை அறிவியல் பொறியியல் பயின்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர கட்டணம் கிடையாது. மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். ஜூலை 15ஆம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு மற்றும் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 10, 12, டிப்ளமோ, கலை அறிவியல் பொறியியல் பயின்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர கட்டணம் கிடையாது. மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். ஜூலை 15ஆம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை அம்பத்தூர், ராமாபுரம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், கே.கே நகர், கிண்டி, ஆலப்பாக்கம், போரூர், மாங்காடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில், கிலோ பூண்டு, 120 – 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி செல்லும் வெளிமாவட்டங்கள் வியாபாரிகள் 1 கிலோ 180 ரூபாய் வரை விலை வைத்து விற்கின்றனர். வடமாநிலங்களில் பூண்டு அறுவடை தொடங்கினால், விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே பூண்டு விலை ஏற்றத்தைக் கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் கனவு எந்தக் காலத்திலும் நிறைவேறாது என எம்.பி. கனிமொழி கூறினாா். திருவொற்றியூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ‘தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்து சட்டப்பேரவையில் செங்கோலை வைப்போம்’ என எல்.முருகன் தெரிவித்த கருத்து, அவரது கனவை வெளிப்படுத்தியுள்ளது. பாஜக கனவு எப்போதும் நிறைவேறாது” என்றார்.
சென்னையில் காற்று மாசு காரணமாக 12 ஆண்டுகளில் 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக ‘தி லான்செட்’ இதழ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2008 முதல் 2019ம் ஆண்டு வரை டெல்லியில் அதிகபட்சமாக 95,719 பேரும், கொல்கத்தாவில் 45,458 பேரும், மும்பையில் 30,544 பேரும், சென்னையில் 28,674 பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், பலருக்கு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னையில் பணியாற்றும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வெண்டும் என சென்னை மண்டல தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் தெரிவித்துள்ளார். விடுமுறை அளிக்காத நிறுவனத்தின் மீது, புகார் அளிக்க 98408-29835, 98842-64814 என்ற எண்ணை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காவல்துறை விசாரணை போதும், சிபிஐ விசாரணை தேவையில்லை. உளவுப் பிரிவு காவல்துறையை பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது” என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என பி.சி.பி. கட்சியின் தேசிய தலைவர் மயவாதி கடுமையாக விமர்சித்துள்ளார். பெரம்பரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர், கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கலாம். புத்தர் காட்டிய மனிதாபிமான வழியில் வாழ்ந்தவர் ஆம்ஸ்டராங் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.