India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று(25.6.24) மழை பெய்து வருகிறது. அதன்படி, பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், முகப்பேர் பகுதியில் மிதமான மழையும், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் காலை வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் குளிர்ச்சி சூழல் நிலவி வருகிறது.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் 2ஆவது நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தயாநிதி மாறன், மக்களவைத் தொகுதிக்கு 4வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
சென்னை வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களான கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மூவருக்கும் தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப், இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் 2ஆவது நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கலாநிதி வீராசாமி, வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு, தமிழச்சி தங்கப்பாண்டியன் 2வது முறையாக எம்.பி-யாக பதவியேற்றுள்ளார்.
சென்னையில் புதிதாக 127 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய பள்ளிகளுக்கான மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடையும். இதில் 254 ஆசிரியர்களும், 127 குழந்தை பராமரிப்பு உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், பள்ளிக் கல்வியை மேம்படுத்த 118 பள்ளிகளுக்கு கணினி உதவியாளர்களும், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மகளிர் சுய உதவிக் குழுக்களையும் ஈடுபடுத்தப்பட உள்ளன.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்தார். அப்போது, கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் ஆளுநரிடம் மனு அளித்தார்.
தி.நகர் ராமசாமி தெருவில், தங்கம் மற்றும் வைர நகைகளைச் செய்து ஜூவல்லரிகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவர் கவுதம் சந்த போத்ரா. இவர், நிறுவனத்தின் கணக்கை ஆய்வு செய்தபோது ரூ.93,00,000 மதிப்பிலான 1,240 கிராம் தங்கம், ரூ.91,00,000 மதிப்பிலான 140 காரட் வைர நகைகள் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவனத்தில் வேலை செய்த 8 பேர் மீது பாண்டி பஜார் போலீசில் நேற்று புகார் செய்தார்.
சென்னையில் முதல்முறையாக ஸ்ரீபத்ராசல ராமர் தரிசனம் 3 நாள்கள்(ஜூன் 28, 29, 30) தி.நகரில் உள்ள கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீபத்ராசல ராமர், 20 அடி உயர அனுமார் தரிசனம் தர உள்ளார். இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் Google paly store மூலம் Alankara Kriya என்ற செயலியில் முன்பதிவு செய்யலாம். இந்நிகழ்வு முற்றிலும் இலவசம். மேலும், விவரங்களுக்கு 73584-77073 என்ற எண்ணை அழைக்கவும்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக நூலகம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழ், அங்கில புத்தகங்கள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், பயணிகள் வரவேற்பை பொறுத்து அடுத்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் என்றனர்.
Sorry, no posts matched your criteria.