India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் வரும் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவை தொடர்பான சேவை மேற்கொள்ளப்படும். மேலும் குறைகள் கூற்றின் அவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் வரும் கல்லூரி மாணவர்கள், ‘ரூட்டு தல’ மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ரயில்கள், ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே டிஎஸ்பி எச்சரித்துள்ளார்.
வடசென்னை ஆர்.கே. நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 15ஆம் தேதி காலை 9 மணியளவில் மாவட்ட அளவிலான தேசிய தொழில் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு, ஐ.டி.ஐ., 8, 9, 10ஆம் வகுப்பு படித்தவர்களை தொழிற்பழகுநர்களாக தேர்வு செய்ய உள்ளனர். அவர்களுக்கு மாதம் உதவித்தொகை ரூ.8000, சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமமான ‘கும்டா’ இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதற்கான செயலியை உருவாக்க ‘முவிங் டெக் இன்னொவட்டிவ் சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் பணி ஆணையை வழங்கியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் சென்றார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக மாறியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மந்தகதியில் உள்ளது. இனியாவது முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சென்ட்ரல், அம்பத்தூர், தி,நகர், கிண்டி, சைதாப்பேட்டை, ராயபுரம், மதுரவாயல், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, வேளச்சேரி, போரூர், அடையார், மதுரவாயல், திருவான்மியூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். பணிகள் முடிந்ததும் மின் விநியோகம் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி, மின்சார வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்றுக்கு 3பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமீபா குறித்து பதட்டமடைய வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர், “அமீபா பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளது. குறிப்பாக நீச்சல் குளம் மூலம் இது பரவவாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜூலை 10 முதல் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 7ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற உள்ளது. மேலும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் 3 மாதத்திற்குள் ஆன்லைன் மூலம் உரிமம் பெற வேண்டும் என்றார்.
சென்னையில் ஜூலை 10 முதல் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற உள்ளது. மேலும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் 3 மாதத்திற்குள் ஆன்லைன் மூலம் உரிமம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.