India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீகார் செல்ல வேண்டி இருந்த ஷாதர் அலாம் என்பவரிடம், தான் ஒரு டிடிஆர் என கூறி ஒருவர் ரூ.900 பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். இளைஞரின் புகார் படி, போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், கொடுங்கையூரைச் சேர்ந்த ஜிதேந்தர் ஷா என்பதும். மக்கள் அதிகமாக கூடும் ரயிலில் டிக்கெட் எடுத்து தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். ரயில் பயணிகள் இது போன்ற மோசடி நபர்களை நம்பி ஏமாறவேண்டாம்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளக்குறிச்சி சம்பவம் திமுகவினர் உதவியுடன்தான் நடந்ததாக கூறுகிறார்கள். உண்மை நிலை என்ன என்பது தெரிய சிபிஐ விசாரணையில் தான் தெரியும்” என்றார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் (On-Off) கிரிக்கெட் போட்டி, (ஜூன் 28) நாளை முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை, ரசிகர்கள் அனைவரும் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிக்கு பிறகு, தென் ஆப்பிரிக்காவுடனான 3 டி20 போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
தொகுதிகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது என்பதால், அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என காங்., எம்.எல்.ஏ ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார். நேற்று சட்டப் பேரவையில் பேசிய அவர், “புதிய சென்னை உருவாக்கி, தலைமைச் செயலகம், சட்டசபை கட்டடம் கட்ட வேண்டும். சட்டசபை மேலவையை தொடங்குவதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை குறைந்தது ரூ.1 கோடி அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நேற்று சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, பேரவைக் கூட்டத் தொடர் முழுவதும் அவையில் பங்கேற்க அதிமுகவினருக்கு தடை விதித்தார். இதனைக் கண்டித்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் இபிஎஸ் தலைமையில் இன்று எழும்பூர் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றும், வாகனங்களை கொண்டுவரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் கடந்த சில நாள்களாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். உங்க பகுதியில் மழை இருக்கா?
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு பணி காரணமாக சென்னை தாம்பரம் – மங்களூரு சிறப்பு ரயில்கள் 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரம் – மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில்(06047) ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் மங்களூரு சந்திப்பு – தாம்பரம் சிறப்பு ரயில்(06048) 29 & ஜூலை 1ம் தேதி என 2 நாள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று(ஜூன் 26) தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்துள்ளது. நேற்று, ஒரு கிலோ ரூ.55க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.15 குறைந்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.80ஐ கடந்து விற்கப்பட்ட நிலையில், வரத்து அதிகரிப்பால் விலை குறைந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சில்லறை விற்பனையிலும் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.