Chennai

News July 10, 2024

ஓமன்- சென்னை இடையே புது விமான சேவை

image

ஓமனை சேர்ந்த ஏர் விமான நிறுவனம் சலாம். இந்நிறுவனம் ஜூலை 11 முதல் வாரந்தோறும் வியாழன் மற்றும் சனி கிழமைகளில் ஓமனில் இருந்து சென்னைக்கு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் ஜூலை 12 முதல் மறு மார்க்கத்தில் வாரந்தோறும் சென்னையில் இருந்து ஓமனுக்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News July 10, 2024

இந்திரா காந்தி பெயரை சூட்ட வேண்டும்: செல்வபெருந்தகை

image

சென்னை யானைக்கவுனியில் கட்டப்படும் பாலத்திற்கு இந்திரா காந்தி பெயரை சூட்ட வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைந்த பின் யானைக்கவுனியில் தான் அவருக்கு முதல் முறையாக சிலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. ஆகையால் பெயர் சூட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

image

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோநகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  தொழிற்நுட்பக்கோளாறை சரி செய்ய பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு பதிலாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

News July 10, 2024

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News July 10, 2024

புதுமை பெண் திட்டத்திற்கு ஆட்சியர் அழைப்பு

image

புதுமை பெண் திட்டத்தின் கீழ், வருகிற கல்வியாண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த மாணவியர், அந்தந்தக் கல்லூரியின் சிறப்பு அலுவலர் வாயிலாக விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

6000 ரவுடிகளை கண்காணிக்க வேண்டும்

image

சென்னையில் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள், திருடர்கள் என 6 ஆயிரம் குற்றவாளிகள் உள்ளனர்‌. அவர்கள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, தற்போது அங்கு வசிக்கிறார்களா? என்று உறுதி செய்ய வேண்டும். அப்படி வசிக்கவில்லை என்றால், எங்கு இருக்கிறார்கள் என்ற விபரங்களை சேகரிக்க வேண்டும். இந்த பணிகளை உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News July 10, 2024

CMDA புதிய தகவல்: ரூ.120 கோடியில் ஏரிகள் சீரமைப்பு

image

சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக உள்ள நிலத்தடி நீர் வளத்தை பெருக்கும் வகையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரிகளை பராமரித்து பாதுகாக்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 12 ஏரிகள் ரூ.120 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்ய, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தில் பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட 12 ஏரிகள் மறு சீரமைப்பு செய்ய உள்ளன.

News July 10, 2024

சென்னையில் நாளை மின்தடை

image

சென்னையில் நாளை மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நாளை (ஜூலை 11) வியாசர்பாடி, மயிலாப்பூர், அரும்பாக்கம், கே.கே நகர், அம்பத்தூர், போரூர், வேளச்சேரி, கிண்டி, ரெட் ஹில்ஸ் ஆகிய இடங்களில் காலை‌ 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்த பின் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2024

ஒலிம்பிக் வீராங்கனைக்கு காசோலை வழங்கல்

image

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16ஆவது நபராக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தேர்வாகியுள்ளார். அதையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவருடைய விமானப் பயணச் செலவு, தங்குமிடம், உணவு, பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கி சிறப்பித்தார்.

News July 9, 2024

நாளை முதல் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

image

சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களைக் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 10,100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 7,265 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செல்ல பிராணி வளர்ப்பவர்கள் 3 மாதத்துக்குள் உரிமம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 59,000 நாய்கள் இருந்தன. 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

error: Content is protected !!