India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ராயப்பேட்டையில் மக்களவை தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று (ஜூலை.10) நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூலை.11) 2ம் நாள் அதிமுக ஆய்வு கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. இதில் சிவகங்கை, வேலூர் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இதற்கு சமூகப்பணி அல்லது அதற்கு இணையான படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜூலை 15ஆம் தேதிக்குள் அனுப்பவும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டியில் 83%க்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது என்றால், அதில் அதிமுக வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தான் அர்த்தம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுமக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியவரும். மேலும், ஜெயக்குமாருடைய கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சசிகலா அதிமுகவில் இல்லாத ஒருவர். அவரை எப்படி கட்சியில் இணைக்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். எழும்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி 3 பேரும் அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னையில் நாளை (ஜூலை 12) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, பல்லாவரம், அம்பத்தூர், திருமுல்லைவாயல், திருவேற்காடு, அயனம்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், புழல், போரூர், அடையார், மாங்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் ‘பெண் குழந்தை பாதுகாப்பு’ திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பியவர்கள் ‘முதிர்வு தொகை’ கிடைக்க பெறாத தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவர்கள், குறிப்பிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு, சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.பி. கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, தலைநகரில் சட்டம் ஒழுங்கு கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இதனால், ஏடிஜிபி அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள ரவுடிகளின் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகிறது. விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தி.நகர், தேனாம்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், மதுரவாயல், முகப்பேர், கிண்டி, சைதாப்பேட்டை, திருவான்மியூர், ஆயிரம் விளக்கு, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
சென்னையில் நாளை(11.7.24) மின்பராமரிப்பு காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, வியாசர்பாடி, மைலாப்பூர், அரும்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், போரூர், வேளச்சேரி, கிண்டி , ஐடிசி, ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.