Chennai

News July 1, 2024

தேவைப்படும் போது சசிகலாவை சந்திப்போம்: ஓபிஎஸ்

image

மதுரை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரிந்து கிடக்கும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நினைக்கிறார்கள். கூடிய விரைவில் அதுதொடர்பான பணிகள் நடைபெறும் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக உரிய நேரத்தில் தேவைப்படும் போது வி.கே.சசிகலாவை நிச்சயம் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

News June 30, 2024

10ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ

image

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2015 ஜூன் 29ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மெட்ரோவில் தற்போது வரை 29 கோடியே 87 லட்சம் பேர் இதில் பயணம் செய்துள்ளனர். மேலும், 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

News June 30, 2024

“சென்னை மாநகராட்சி முடங்கிப்போயுள்ளது”

image

சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கி போயுள்ளதாக பிரேமலதா கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சைதாப்பேட்டை பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும், தமிழகத்தில் உயிர்களுக்கு விலை இல்லை. பணம் மட்டும் தான் பிரதானமாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News June 30, 2024

சென்னையில் என்.ஐ.ஏ சோதனை

image

சென்னை 12 இடங்களில், என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ’ஹிஸ்புத் தஹிர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்ஐஏ தரப்பிலிருந்து வெளியிடப்படுமென தெரிகிறது.

News June 30, 2024

சென்னையில் 250 பவுன் நகை கொள்ளை

image

சென்னை எம்.ஆர்.சி. நகரைச் சேர்ந்த பங்குச்சந்தை வர்த்தகர் கோபாலகிருஷ்ணன் வீட்டில், நேற்றிரவு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த 250 தங்க நகை, 10 கிலோ வெள்ளி, 25 லட்சம் ரொக்கம் காணாமல் போயுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, தனது ஓட்டுநர் சரவணன் மீது கோபாலகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 29, 2024

சென்னையில் நாளை HAPPY STREETS

image

சென்னை அண்ணா நகர் 2-ஆவது நிழற்சாலையில் நாளை, ஜூலை 7, 14, 21ஆகிய தேதிகளில் HAPPY STREETS நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2வது நிழற்சாலையில் புளு ஸ்டார் சந்திப்பு முதல் 2வது நிழற்சாலை, 3வது நிழற்சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

News June 29, 2024

சென்னை அரசுப் பள்ளியில் வேலை

image

சென்னையில் உள்ள 3 ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளுக்கு ஆசிரியர்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://chennai.nic.in/ என்ற இணைய தளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ, நேரிலோ விண்ணப்பிக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியரகம்.

News June 29, 2024

சென்னை-டெல்லி இடையே 16 விமான சேவைகள் ரத்து

image

சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் விமான சேவைகள் நேற்று மதியம் முதல் இன்று மாலை வரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புதுடெல்லிக்கு புறப்படும் 7 விமானங்கள், புதுடெல்லியில் இருந்து வரும் 9 விமானங்கள் என மொத்தம் 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!