India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு இன்று த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் பரிசு வழங்க உள்ளார். முதல்கட்டமாக கடந்த ஜூன் 28ஆம் சந்தித்த அவர், இன்று 2ஆம் கட்டமாக 700 மாணவர்களை சந்திக்க உள்ளார். சென்னை திருவான்மியூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு இந்நிகழ்ச்சியானது தொடங்க உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (06069) ஜூலை 5 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் வியாழக்கிழமை இயக்கப்படும் இந்த ரயில் (06070) ஜூலை 4 முதல் ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவினை முன்னிட்டு, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத் தலைவர் தாரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னையில் குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருடுபோன வாகனங்களை மீட்க, ஆங்காங்கே ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களோடு முக்கிய சாலை சந்திப்புகளில் 500 நவீன கேமராக்களையும் போலீஸார் பொறுத்தியுள்ளனர். திருடுபோன வாகனங்கள் சென்றால், இந்த கேமராக்கள் புகைப்படம் எடுத்து அதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கும்.
சென்னையிலுள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ரூ.300லிருந்து ரூ.325 ஆக மாநகராட்சி உயர்த்தியுள்ளது. அண்மையில் நடந்த மாநகராட்சி மன்றத்தில் இந்தத் தீர்மானம் மேயர் பிரியாவால் நிறைவேற்றப்பட்டது. அம்மா உணவகங்களில் சுமார் 3,100 பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்தத் தீர்மானத்தின்படி, ஜூன் மாதத்தில் இருந்து அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை (ஜூலை 3) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், நொளம்பூர், திருமுல்லைவாயல், ரெட் ஹில்ஸ், புழல், பெரம்பூர், பல்லாவரம், வட பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், கியு.ஆர். கோடு மூலம் 37,05,316 பேர், பயண அட்டைகள் மூலம் 31,33,011 பேர், டோக்கன் மூலம் 30,752 பேர் மற்றும் சிங்கார சென்னை அட்டை மூலம் 15,61,001 பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். மேலும், நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கு மிக முக்கிய ஒரு போக்குவரத்து வசதியாக உள்ளது. அந்தவகையில் ஜூன் மாதத்தில் மட்டும் 84,33.837 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஜூன் 21ஆம் தேதி மட்டும் 3,27,110 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய வசதிகள் கொண்டு வரப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசகர்கள் ( ம) பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, உறுப்பினர்களாக சேர்வதற்கு விரும்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்களை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பிலான 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளின் சேவை தொடக்க விழா இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், சுற்றுலா வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.