Chennai

News August 6, 2024

சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் இன்று 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், திருவல்லிகேணி, எழும்பூர், அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

News August 6, 2024

ஆவின் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்: அமைச்சர்

image

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களுக்கு தேவையான ஆவின் உற்பத்தி பொருட்களை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

News August 6, 2024

மாநகரப் போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி

image

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.50000 சம்பளத்தில் ஒரு வருடத்திற்கு மட்டும் ஆட்களை பணியமர்த்த உள்ளது. போக்குவரத்து பொறியியல் துறைகளில் முதுகலைப் பட்டமும், குறைந்தபட்சம் 1-2 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் தேவை. விண்ணப்பதாரர்கள் mtc.chn@gmail.com என்ற மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம். விண்னப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 15 ஆகும்.

News August 6, 2024

குடிபோதையில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

image

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தர்மராஜ் கடந்த 10 வருடமாக ரகு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் டிரைவராக பணிபுரிந்து வருந்தார். கடந்த 3ஆம் தேதி கடலில் மீன்பிடித்த அவர், ரகுவிடம் பணம் வாங்கி மது அருந்திவிட்டு படகில் உறங்க சென்றுள்ளார். அப்போது, மது போதையில் கடலில் தவறி விழுந்துள்ளார். அவரது பிரேதம் இன்று கரை ஒதுங்கிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 6, 2024

சைதாபேட்டை ரவுடி சோத்துப் பானை மணிகண்டன் கைது

image

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடியான சோத்துப் பானை மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். 2 கொலை உள்பட 25 வழக்குகளில் தொடர்புடைய இவரை, போலீசார் நீண்ட நாட்களாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை போலீசார் அவரை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டருகே கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 6, 2024

இந்து மதத்தை விமர்சித்ததாக பா.ரஞ்சித் மீது புகார்

image

பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட தலைவர் யுவராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “பா.ரஞ்சித் ஒரு பேட்டியில், நந்தி சிலை மீது ஏறி நின்று பார்த்ததாகவும், புத்தகத்தின் மீது ஏறி நின்றதாகவும் கூறியிருந்தார். இது, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துவது போல உள்ளது. இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

News August 6, 2024

தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. மர்ம நபர்கள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதால், போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இன்று காலை, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு இ-மெயில் மூலமாக டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது, இப்பள்ளிக்கு வரும் 9ஆவது வெடிகுண்டு மிரட்டல் ஆகும். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 6, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தி.நகர், கே.கே. நகர், ஏரிக்கரை சாலை, கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அசோக் நகர், சாலிகிராமம், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், அண்ணா நகர், பட்டாபிராம், சாந்தி காலனி, ஷெனாய் நகர், அம்பத்தூர், இராயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

News August 5, 2024

ஒன்றிய அமைச்சரிடம் மனு கொடுத்த தென்சென்னை எம்பி

image

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்கள் இன்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டில்லியில் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் சந்திப்பின் போது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளான எஸ்கலேட்டர்கள், விரிவாக்கப்பட்ட நடைமேடைகள், சிசிடிவி பாதுகாப்பு கொண்டு மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளித்தார்.

News August 5, 2024

சென்னையில் உதயமாகும் புதிய தாலுகா

image

சென்னையில் தற்போது 16 தாலுகாக்கள் உள்ளன. இந்நிலையில் அயனாவரம் தாலுகாவை இரண்டாக பிரித்து கொளத்தூர், சிறுவள்ளூர், பெரவள்ளூர் பகுதிகளை உள்ளடக்கி தனி தாலுகா அமைக்கப்பட உள்ளது. இதற்கான தனி ஆய்வு, தாலுகா அலுவலகம் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதத்தில் கொளத்தூர் தாலுகா உதயமாகும் வகையில் வருவாய் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

error: Content is protected !!