Chennai

News August 7, 2024

பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், சிறையில் உள்ள பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியான அருள் உடன் அஸ்வத்தாமன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்கள் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆவார்.

News August 7, 2024

கருணாநிதி படம் பொறித்த நாணயம் வெளியீடு

image

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, ரூ.100 மதிப்பிலான நாணயம் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக சென்னையில் கலைவாணர் அரங்கில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார்.

News August 7, 2024

2 இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

image

முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் காவல்துறையினர் சிக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் முனியசாமி, பாண்டி பஜார் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி ஆகிய இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் அருண் இன்று உத்தரவிட்டார்.

News August 7, 2024

குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழப்பு

image

ஆவடி, நந்தவனம்மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் – பிரியா தம்பதிகளின் மகள் ரூபாவதி (5) நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குளிர்சாதனப் பெட்டியில் இருந்து கசிந்த மின்சாரம், ரூபாவதி மீது தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். குழந்தையை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனை கொண்டு செல்ல, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 7, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மடிப்பாக்கம், மாத்தூர், கொரட்டூர், ராஜ கீழ்பாக்கம், எம்.எம்.டி.ஏ., சி.பி.சி.எல். நகர், சின்னசாமி நகர், காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், காத்தாக்குழி, திடீர் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News August 6, 2024

காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம்

image

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை மாலை 4.00 மணிக்கு எழும்பூரில் நடைபெறவுள்ளது. இதில், முன்னாள் தலைவர்கள் தங்கப்பாலு, ஈ.வெ.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் செல்லக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

News August 6, 2024

சென்னை ஐ.ஐ.டி-க்கு ரூ.228 கோடி முன்னாள் மாணவர் நன்கொடை

image

சென்னை அடையாறு அருகே உள்ள ஐஐடி முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா என்பவர் ஐ.ஐ.டி-க்கு ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொடை இந்திய வரலாற்றில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்று எனக் கூறியுள்ள ஐஐடி, சென்னை ஐஐடி பணிகள் மேலும் வலுப்படும் எனத் தெரிவித்துள்ளது.

News August 6, 2024

சென்னை அடையாற்றில் இடியுடன் மழை பெய்து வருகிறது

image

சென்னை திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது‌. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்றும் மழை பெய்து வருகிறது.

News August 6, 2024

ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தி பள்ளி தாளாளரை தேடும் போலீஸ்

image

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கேளம்பாக்கத்தை அடுத்த படூரை சேர்ந்த சதீஷ் என்பவரின் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதம் காரணமாக போலியான பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது. சதிஷ் என்பவரின் பெயரை பயன்படுத்தி கொலை மிரட்டல் கடிதம் எழுதிய கடலூர் பள்ளி தாளாளர் அருண்ராஜை கேளம்பாக்கம் போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

News August 6, 2024

சென்னையில் நிதி நிறுவன மேசடி புகாரில் 2 பேர் கைது

image

சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் நிறுவ இயக்குநர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரசைவாக்கத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ. 45 கோடி முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மோகன், சுப்ரமணியம் ஆகிய இருவரை காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!