India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது” என்று கூறினார். இக்கருத்து சர்ச்சையான நிலையில், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், “நான் அதை உள் நோக்கத்துடன் பேசவில்லை. கல்வி அனைவருக்குமானதாக மாறிவிட்டது என்ற அர்த்தத்தில் தான் கூறினேன்” என இந்த சர்ச்சை தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று(3.7.2024) மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, நூங்கம்பாக்கம், கீழ்பாக்கம், அயனாவரம், அண்ணா நகர் உள்பட பகுதிகளில் மிதமான மழையும், திருத்தணி பகுதியில் பலத்த மழையும் பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் இதமான சூழல் நிலவுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூர்- நாகர்கோவிலுக்கு ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் இருபுறமும் இயங்கும். இச்சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் படி ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 26ந் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு வார காலத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், புகையிலை பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் சம்பந்தமாக 26 வழக்குகளை பதிவு செய்து 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 494 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையின் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் திசையின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூலை 9ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மழையின்றி காணப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்பதற்கான 8 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகள் தெரிந்தவர்கள், ஆங்கிலம், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், ஆங்கிலம், கன்னடம் தெரிந்தவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் www.mhc.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
வார விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஜூன் 5 முதல் 7 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். கிளம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 5ஆம் தேதி 415 பேருந்துகளும், 6ஆம் தேதி 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை (ஜூலை 4) மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல், செங்குன்றம், பள்ளிக்கரணை, சித்தாலபாக்கம், பெரும்பாக்கம், பல்லாவரம், அம்பத்தூர், திருவேற்காடு, கிண்டி, திருவான்மியூர், மதுரவாயல், தி.நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் மின்தடை செய்யப்படும். பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில், தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் காவல்துறை, வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுபவர்களிடம் இதுவரை ரூ.2.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், காரில் ‘சன்ஃபிலிம்’ ஒட்டியது தொடர்பாக 6,279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.31.4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக மின்னஞ்சலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால், அது வதந்தி என்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்தது யார் என்று கோட்டுர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.