India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில், ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம்பெயர் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஜூலை 7 ஆம் தேதி வரை நடைபெறும் உணவுத் திருவிழாவை கனிமொழி MP இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். 3 நாள் நடைபெறும் திருவிழாவில் இலங்கை, பர்மா போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெறுகின்றன.
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை(ஜூலை 6) கே.கே நகர், பட்டாபிராம், திருமுல்லைவாயல், அலமாதி, அம்பத்தூர், ஜெ.ஜெ நகர், வேளச்சேரி, ஐய்யப்பன் தாங்கல், திருமுடிவாக்கம், மயிலாப்பூர், கிண்டி, ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படும். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பணிகள் நடைபெறும். அவை முடிவடைந்தவுடன் தொடர்ந்து மின் விநியோகம் வழங்கப்படும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,739 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியில் 128 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,482 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 65 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில், 300 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளதாக இன்று(ஜூலை 5) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று இரவு 1 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் X தள பதிவில், திமுக இளைஞர் அணிச் செயலாளராக இன்று 6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று இரவு 8.30 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பெய்த மழையால், நகரின் முக்கிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், தடம்மாறும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள 30 பள்ளிகளுக்கு, 15 முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்தவும், இவர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கவும் உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் பணியமர்த்த முடிவு செய்ப்பட்டுள்ளது டி.ஓ.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில், நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை (ஜூலை 5) ஆதம்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், ராம் நகர், அம்பத்தூர், அடையாளம்பட்டு, வேளச்சேரி, அனகாபுத்தூர், ஆதாம் நகர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு பெய்த மழை குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நேற்றிரவு 1 மணி நேரத்தில் 60 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. ஜூலை மாதத்தின் சராசரி மழைப் பொழிவு 100 மி.மீ ஆகும். 1 மாதத்தின் சராசரி மழையில் 60%, 1 மணி நேரத்தில் பெய்துள்ளது. எழும்பூர், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு சென்ட்ரல், எழும்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், தி.நகர், அண்ணாநகர், முகப்பேர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால், மின்சாரம் பாதிக்கப்பட்டது. மேலும், ஜூலை 9ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.