Chennai

News July 14, 2024

திமுக அரசு நாடகமாடுகிறது: சீமான்

image

ரௌடி திருவேங்கடம் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும். உண்மையை மூடி மறைக்க போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம்” என, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

News July 14, 2024

‘நொடிக்கு நொடி’ படம் பூஜையுடன் தொடங்கியது

image

நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் ஆதிராஜ் இயக்கத்தில், நடிகர் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ திரைப்படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கியது. விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படத்தை உருவாக்க உள்ளதாக இயக்குநர் விஜய் ஆதிராஜ் கூறியுள்ளார்.

News July 14, 2024

சென்னையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம்

image

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில் 3 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. அதற்கு தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரக நல அலுவலகத்துக்கு வரும் 19-ம் தேதிக்குள் 5:45 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

சென்னை ஏரிகளின் நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,745 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 136 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,509 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 86 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 310 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று(ஜூலை 14) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News July 14, 2024

BNS-ல் முதல்முறையாக வழக்கு

image

சென்னை, திருமங்கலத்தில் லாரி ஏறியதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுநர் மீது புதிய குற்றவியல் சட்டம் 106(2), 261 BNS ஆகிய இரு பிரிவுகளின் கீழ் முதல் முறையாக வழக்கு பதியப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு காவல்துறையினரிடம் தெரிவிக்காமல், காயமடைந்த நபரை மீட்பதற்கு உதவி புரியாமல் தப்பிச்செல்லும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க 106(2) பிரிவு வழிவகை செய்கிறது.

News July 14, 2024

சுதந்திர போராட்டம் தொடர்பான பொருட்களை வழங்கலாம்

image

சென்னை மெரினா கடற்கரை எதிரே உள்ள ஹூமாயூன் மஹாலில் சுமார் 80,000 சதுர அடி பரப்பில் அருங்காட்சியகம் அமைய உள்ளது. பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான அரிய பொருட்களை சென்னை மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று வழங்கலாம். இவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதனை வழங்கியவர்களின் பெயர்களும் இடம் பெறும்‌ என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விலை நிலவரம்

image

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று(ஜூலை 14) ஒரு கிலோ வெங்காயம் ரூ.36 – ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.75 – ரூ.90க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 – ரூ.45க்கும், தக்காளி ரூ.35 – ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.46 – ரூ.60க்கும், சவ் சவ், முள்ளங்கி ரூ.25 – ரூ.30க்கும், முட்டைக்கோஸ் ரூ.38 – ரூ.40க்கும், முருங்கைக்காய் ரூ.65 – ரூ.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News July 14, 2024

BNS-ல் முதல்முறையாக வழக்கு

image

சென்னை, திருமங்கலத்தில் லாரி ஏறியதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுநர் மீது புதிய குற்றவியல் சட்டம் 106(2), 261 BNS ஆகிய இரு பிரிவுகளின் கீழ் முதல் முறையாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு காவல்துறையினரிடம் தெரிவிக்காமல், காயமடைந்த நபரை மீட்பதற்கு உதவி புரியாமல் தப்பிச்செல்லும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க 106(2) பிரிவு வழிவகை செய்கிறது.

News July 14, 2024

பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னை மாநகர இணை காவல் ஆணையர் சுதாகர் (போக்குவரத்து) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News July 14, 2024

சென்னை கலெக்டர் அறிவிப்பு

image

சென்னை மெரினா கடற்கரை எதிரே உள்ள ஹூமாயூன் மஹாலில் சுமார் 80,000 சதுர அடி பரப்பில் அருங்காட்சியகம் அமைய உள்ளது. பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான அரிய பொருட்களை சென்னை மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று வழங்கலாம். இவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதனை வழங்கியவர்களின் பெயர்களும் இடம் பெறும்‌ என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!