India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் சைதாப்பேட்டை திமுக அலுவலகத்தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான மா. சுப்ரமணியம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் களம் கண்ட அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று(ஜூலை 15) அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.
சென்னை காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை செல்லக்கூடிய சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில், மெட்ரோ வாட்டர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும், அந்த சுரங்க பாதையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டு பாரிமுனை வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்படுகிறது. சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் நேற்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதில் மீதமுள்ள 10 பேர் மீது குண்டர் சட்டம் பாயும் என சென்னை காவல் ஆணையாளர் அருண் உறுதி அளித்துள்ளார்.
என்கவுண்டர் என்பது முற்றிலுமாக தேவையற்றது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அண்ணா சாலை பல்லவன் இல்லம் அருகே நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ஏற்கனவே சரணடைந்தவரை கொலை செய்திருக்கிறார்கள். அங்கேயே உண்மையும் கொலை செய்யப்பட்டுவிட்டது. விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் திண்டாடி கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ரவுடி திருவேங்கடம், நேற்று சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 26 ஆண்டுகளில் 26 என்கவுண்டர்கள் செய்யப்பட்டுள்ளன. 1998 – 99 காலங்களில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். 2003 – 7 கால கட்டத்தில் ரவுடி வீரமணி, வெள்ளை ரவி என்கவுண்டர் செய்யப்பட்டனர். 2012இல் வங்கி கொள்ளை சம்பவத்தில் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
சென்னையில் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒழிக்க புதிய போலீஸ் கமிஷனர் அருண் தலைமையிலான போலீசார், புதிய அவதாரம் எடுத்துள்ளனர். இதன் தொடக்கமாக, நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடி திருவேங்கடம் என்பவரை, போலீசார் நேற்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இதனால், ரவுடிகளின் அட்டூழியம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சென்னையில் நாளை (ஜூலை 16) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தி.நகர், சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, பல்லாவரம், வெங்கடேஷ்வரா நகர், அம்பத்தூர், கிண்டி ஆகிய முக்கிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்றும், மாலை 5 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரௌடி திருவேங்கடம் இன்று(ஜூலை 14) காவலர்களால் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி உள்ளது. என்கவுன்டர் தொடர்பாக காவலர்கள் சொல்லும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. உரிய விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவேங்கடம் இன்று காலை என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டார். 2014ல் குன்றத்தூரில் நடந்த கொலை, 2015ல் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் நடந்த திருவள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் தென்னரசு கொலை வழக்குகளில் தொடர்புள்ளவர் திருவேங்கடம். இவர், ஆட்டோ ஓட்டுநர் போல் 10 நாட்களாக நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.