India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
TNPSC குரூப்-2 & குரூப்-2a முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சிகள் கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ அமைப்பு மூலம் ஜுலை 18 முதல் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேர, நேரில் அம்மையத்தை அணுகுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். உங்களுக்கு தெரிஞ்சவங்க TNPSC தேர்வுக்கு படிக்குறாங்களா?
எழும்பூர் ரெட் கிராஸ் சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பாலசுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான தனியார் மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று(ஜூலை 15) நள்ளிரவு பூட்டை உடைத்து ரூ.15,000 கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எழும்பூர் பகுதியில் மேலும் 2 நிறுவனங்களிலும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடம்பெற்றம் செய்யப்ட்டுள்ளார். அவருக்கு பதிலாக தீரஜ்க புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுளார்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து இன்று 6ஆவது நாளாக, ராய்ப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இன்றைய கூட்டத்தில், முதலில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளும், அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளும், பின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவாவுக்கு, இன்று தலைமை செயலகத்தில் ,முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். பாமக வேட்பாளரவிட 67,000 வாக்குகள் அதிகம் பெற்று அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 134ஆவதாக தொடர்கிறது.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு, தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி உடைய நபர்கள் சென்னை திராவிட மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் நேரடியாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ ஜூலை 19 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து, ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக, காவல்துறையின் நடவடிக்கைகள் கடந்த ஒரு வாரமாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் (ஜூலை 14, 15) சென்னையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 77 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், ரவுடிகளுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு மைதானத்தில் நாளை, பள்ளி மற்றும் கல்லூரி இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது. காலை 10 மணி அளவில் தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் ரூ.400 ஆகும். விருப்பமுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், கீழேயுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். கைப்பேசி எண்கள்: 7358114256, 9962484129. உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.