India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கபட்டிருந்தது. இதனை திரும்பப் பெற்று வேலை நாள் அறிவிப்பை ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டும் இன்றும் (ஆகஸ்ட்10), ஆகஸ்ட் 24-ஆம் தேதியும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் விரைவு ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது என்றாலும் பயணிகளின் வசதிக்காக மாம்பலம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. SHARE IT
‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ போட்டியை சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். ‘விபத்தில்லா தினம்’ தொடர்பாக 60 வினாடிகள் வரை ரீல்ஸ் உருவாக்க வேண்டும். #zeroaccidentday, #ZAD, #safechennai, #GCTP, #zeroisgood என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்த வேண்டும், ரீல்ஸ் போட்டியில் முதல் பரிசுத்தொகையாக ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போரட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து வடசென்னை அதிமுக நிர்வாகி கணேசன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணக்குள் 30 நிமிடங்களுக்கு மட்டும் போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.
வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிறன்று( ஆக.11) இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5.50க்கு தாம்பரம் வந்தடையும்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை கைது செய்தற்கான வாரண்ட் அவரிடம் வழங்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும், வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவருமான நாகேந்திரன் தற்போது சிறையில் உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா? என கமெண்ட் பண்ணுங்க.
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டமான ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை கோவை அரசு கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை கிண்டியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ATM கார்டுகளை வழங்கினர்.
24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக கங்கேஸ்வரி, சைபர் கிரைம் துணை ஆணைராக சரினா பேகம், ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக முத்தமிழ், சைபர் அரங்க கண்காணிப்பாளராக மீனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.