Chennai

News August 10, 2024

விரைவில் போராட்டம் நடத்துவோம்: வேல்முருகன்

image

தோழர் சேகுவார் திரைப்படமத்தின் டிரையிலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அம்பேத்கருக்கு பிறகு இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திருமாவளவன் செயல்பட்டு வருகிறார் என்றும், ஒன்றிய அரசு துணையோடு செயல்பட்டும் சென்சார் போர்டு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், தமிழ் தேசிய அமைப்புகளை ஒன்றிணைத்து விரைவில் போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.

News August 10, 2024

யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்: கூல் சுரேஷ்

image

தோழர் சேகுவார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசிய போது, “இது ஒரு சகாப்தம் படைக்க சனாதனத்தை எதிர்க்கும் மேடை என்றும், வரும் 2026-யில் கூல் சுரேஷ் கட்சி திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் ஐயா யாருடனும் கூட்டணி வைக்கலாம் எனவும், விஜய் டிவி Bigg Boss நிகழ்ச்சியை திருமாவளவன் ஐயா தொகுத்து வழங்க வேண்டும்” என்றும் கூறினார்.

News August 10, 2024

சென்னை போக்குவரத்து போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

image

சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு வாசிகள், தங்கள் வீடுகளின் முன் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகளை வைத்துள்ளதாக, நந்தகுமார் என்பவர் வழக்கு தொடுத்தார். இதுபோன்ற போர்டுகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகளை அகற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 10, 2024

ஆம்ஸ்ட்ராங்க கொலை தொடர்பாக போராடிய 1500 பேர் மீது வழக்கு

image

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நேற்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு கருத்துகளை இயங்குநர் ரஞ்சித் பேசியிருந்தார். இதையடுத்து தற்போது போராட்டகாரர்கள் மீது வழக்கு பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News August 10, 2024

தேசிய தகவல் மையத்தை நாடும் சென்னை போலீஸ்

image

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல தாதா நாகேந்திரன் உட்பட 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்பவம் செந்திலை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், சம்பவம் செந்திலை கைது செய்ய தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்வதற்கான வேலையில் சென்னை போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

News August 10, 2024

சென்னையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு 11 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். அதன்பின், வரும் 11ம் தேதி இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5.50க்கு தாம்பரம் வந்தடையும்.

News August 10, 2024

கார் பந்தயத்திற்கு எதிராக அதிமுக வழக்கு

image

சென்னையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இந்த கார் பந்தயத்திற்கு எதிராக அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிடுமாறு உச்சநீதிமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியுள்ளது. இந்த கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

ஆவின் நெய் விலையை குறைத்தது ஆவின் நிர்வாகம்

image

ஆவின் நிர்வாகத்தில் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், தயிர், மோர் போன்ற பல்வேறு பொருட்களின் விலைகளை விழா காலங்களில் குறைப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது ஆடி மாதம் நடைமுறையில் இருப்பதால் 100 ML ஆவின் நெய் 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் இந்த அறிவிப்பு இன்று முதல் அமல்படுத்தப்படும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 10, 2024

சென்னையில் 10,304 மாணவர்கள் உதவி தொகை பெற்றுள்ளனர்

image

மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இத்திட்டத்திற்கான ஏ.டி.எம் கார்டுகளை அமைச்சர் சேகர்பாபு மாணவர்களுக்கு வழங்கினார். சென்னை மாவட்டத்தில் முதற்கட்டமாக 135 கல்லூரிகளை சேர்ந்த 10,304 மாணவர்களுக்கு, இத்திட்டத்தின் மூலம் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

சென்னை பல்கலையில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்

image

சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமன தேர்வுக்குழு அமைப்பதை காரணம் காட்டி, கடந்த 2023 ஏப்ரலில் பட்டப்படிப்பை முடித்த சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கவில்லை. சான்றிதழ் பெறாத காரணத்தால் மாணவர்கள் பல சங்கடங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே இப்பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

error: Content is protected !!