India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் அருணை சென்னை கிழக்கு மண்டல கடலோர பாதுகாப்பு படை கமாண்டர் ஐஜி டானி மைக்கேல் அருணை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது மீட்பு பணிகளில் ஒருங்கிணைப்பு, நுண்ணறிவு தகவல்களை பகிர்வதில் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு கடலோர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
சென்னையில் இன்று(ஜூலை 18) இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. கடந்த 3 நாட்களாகவே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து இன்று மாலை கிண்டி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார். இன்று முதல் டிசம்பர் 2024 வரை மண்டல வாரியாக மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், உள்ளிட்ட 8 இடங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்ல உள்ளனர். முதற்கட்டமாக இந்த ஆண்டு 16,366 மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 298 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி , அறிவியல் பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை பட்டப் படிப்பு முடித்து 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். www.mhc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 18) கடைசி நாள் ஆகும்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. இதற்கு இலவச பயிற்சி கிண்டியில் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜூன் 20ஆம் தேதி குரூப் 2 குரூப் 2A பணிக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது எனவும், சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பாஜக பிரமுகர் அஞ்சலை, தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை மாவட்ட பாஜக துணை தலைவியாக உள்ள அவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 2 பேரும், திமுக நிர்வாகியின் மகன் ஒருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புறநகர் பகுதியான வானகரம் இயேசு அழைக்கிறார் இல்லத்தில், AICCC இரண்டாவது மாநில மாநாடு பேராயர்கள் மோகன்தாஸ் மற்றும் மதன் இமான் வேல் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு இறை வார்த்தை டாக்டர் பால் தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
ஆர்.எஸ்.எஸ் ஊடகப் பிரிவு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தனது ஆண்டு பயண திட்டத்தின் படி ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் ஜூலை 20ம் தேதி சென்னை வருகிறார். மறுநாள் குரு பூஜை விழாவில் கலந்து கொள்கிறார். இது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கான நிகழ்ச்சி என்றும், இந்த நிகழ்வின்போது பத்திரிக்கையாளர் சந்திப்பு எதுவும் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரம் நாய்க்கடி வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. பொது மக்களிடம் இருந்து புகார்கள் குறைந்தாலும் சமீப காலமாக நாய் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. சென்னை மண்டலங்களிலும் வாகனங்களில் ஊழியர்கள் தினமும் சென்று நாய்களை பிடிக்கின்றனர். 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 58 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.