India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி லோகேஷ்(32) என்பவரை இன்று வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், அவரது நண்பர்களே அவரை வெட்டி கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதால், கொலை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் (ஆகஸ்ட் 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நங்கநல்லூர், குபேரன் நகர், எல்.ஐ.சி. நகர், மயிலை கபாலீஸ்வரர் நகர், பாலாம்பிகை நகர், கற்பகாம்பாள் நகர், ராஜராஜேஸ்வரி நகர், மாடம்பாக்கம், ராஜ கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும். பணிகள் முடிவடைந்து உடன் விநியோகம் கொடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, ராயபுரம், அசோக் நகர், அயனாவரம், பெரம்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்யுதா? என கமெண்டில் சொல்லுங்க
பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்துடன் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.சென்னை தி.நகரில் நடிகர் சங்க கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, படப்பிடிப்பு நிறுத்தக்கூடாது என்பதில் நடிகர் சங்கம் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வரை உள்ள ரயில் நிலையங்களில் ஸ்டால்கள் அமைத்து வணிகம் செய்ய விரும்புவோர், அடுத்த மாதம் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருப்ப கடிதத்தையும் அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள், தெற்கு ரயில்வேக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை https://sr.indianrailways.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நேரில் பங்கேற்காத சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் துணைத் தலைவர் கருணாஸ் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் 18 & 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஆக.,19 & 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் நேற்று(ஆக.,10) இரவு தெரிவித்தனர். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
ராமச்சந்திரா ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் இதுவரை 1,922 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்று கூறினார். மேலும், திருச்செந்தூரில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடைபெறும் எனத் தெரிவித்தார்.
சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் கோபிநாத் என்பவர் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஷ வாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒருவரும், கடந்த ஆண்டு ஒருவரும் ஆவடி மாநகராட்சியில் இதேபோல் பலியானது குறிப்பிடத்தக்கது.
ராமச்சந்திர ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த தமாக தலைவர் ஜி.கே.வாசன், “அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் கட்சி மாறி வருகிறார்கள். வட்டார ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் பல்வேறு கட்சியில் இருந்து பலர் தாமகாவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். ஆள் பிடிக்கும் வேலை தமாகவுக்கு கிடையாது. புதுப்பொலிவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பணி தொடங்கியுள்ளது” என்றார்.
Sorry, no posts matched your criteria.