India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை காவல் ஆணையாளர் ஏ.அருண் உத்தரவின்படி கடந்த 5 முதல் 11 – ந் தேதி வரையிலான 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பாக தெரிவித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் காவலாளியாக இருந்த ரகு என்பவரின் மகள் சுரக்ஷாவை, அப்பகுதியைச் சேர்ந்த புகழேந்திக்கு சொந்தமான இரண்டு ராட்வீலர் நாய்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடித்து குதறின. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உரிய இழப்பீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், தனி நபருக்கு சொந்தமான நாய் கடித்ததற்கு அரசு பொறுப்பாக முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலாவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் பாதுகாப்பாக செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் மழை பெய்யுமா, உங்களின் கருத்து என்ன்?
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சட்டவிரோத பணம் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கதுறையால் ஜூன் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணைக்காக புழல் சிறையில் காணொலி காட்சி மூலம் இன்று ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தபட்டார். அவருக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பராமரிப்பு காரணமாக ஆக.14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து ஆக்.18-ஆம் தேதி வரை 55 மின்சார ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதுச்சேரி – சென்னை, எழும்பூர் – சென்னை, எழும்பூர் – புதுச்சேரி, சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், விழுப்புரம் – தாம்பரம் உள்ளிட்ட ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். கலைஞர் பெயரில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கைக்கு நிதி அமைச்சர் அனுமதி அளித்ததன் காரணமாக நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது.
சென்னை மாநகரில் தொடர்ச்சியாக குற்றவாளிகளின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, மாநகராட்சி காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 7 நாட்களில் சென்னை மாநகரில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
77ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 9,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசியக் கொடி ஏற்றப்படும் புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி லோகேஷ்(32) என்பவரை இன்று வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், அவரது நண்பர்களே அவரை வெட்டி கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதால், கொலை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் (ஆகஸ்ட் 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நங்கநல்லூர், குபேரன் நகர், எல்.ஐ.சி. நகர், மயிலை கபாலீஸ்வரர் நகர், பாலாம்பிகை நகர், கற்பகாம்பாள் நகர், ராஜராஜேஸ்வரி நகர், மாடம்பாக்கம், ராஜ கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும். பணிகள் முடிவடைந்து உடன் விநியோகம் கொடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.