Chennai

News August 13, 2024

காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

image

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பாஜக கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் எந்ததெந்த இடங்களில் பேரணி நடைபெறவுள்ளது குறித்து ஆராய்ந்து பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

News August 13, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் காவல்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியது குறித்து விசாரணை மேற்கொள்ள 7 நாட்கள் அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம் 4 நாட்களுக்கு அனுமதியளித்துள்ளது.

News August 13, 2024

சென்னையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

image

திருவண்ணாமலை மாவட்டம் பகுதியில் குளிர்பானம் அருந்தி சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடைபெற்று வருவதாக சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் இது போன்ற பாதிப்பு உள்ளதா என இன்று ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும், FSSI ஒப்புதலுடன் விற்கப்படும் குளிர்பானங்கள் இது போன்ற எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்தார்.

News August 13, 2024

விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

சுதந்திர தின விடுமுறையையொட்டி, தென் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ஏ.சி அதிவிரைவு ரயில் புதன் இரவு 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். மறுநாள் (ஆக.15) மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இது, வரும் 15ஆம் தேதி நாகர்கோவிலில் மதியம் 3.30 புறப்பட்டு 16ஆம் தேதி அதிகாலை 5.10 மணிக்கு ஆவடி வந்தடையும்.

News August 13, 2024

ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

image

ரூ.44,125 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டிளித்த அவர், அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், 15 முதலீட்டு நிறுவனங்கள் மூலம் 24,700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

News August 13, 2024

ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக் கொலை

image

ஓட்டேரி, பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சிராஜ் (30). இவர், நேற்று மதியம் ஓட்டேரி பழைய மாநகராட்சி கட்டிடத்தின் உள்ளே இம்ரான் (30), முகமது கலீல் (28) ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த இருவரும் சிராஜின் கழுத்தில் வெட்டியதுடன் கத்தியால் அவரது மர்ம உறுப்பையும் வெட்டி வீசினர். பின், ஆட்டோவில் ஏறி ஓட்டேரி போலீசில் கத்தியுடன் சரண் அடைந்தனர்.

News August 13, 2024

ரவுடி ரோகித் ராஜை சுட்டுப் பிடித்த போலீஸ்

image

சென்னை டி.பி.சத்திரத்தில் பிரபல ரவுடி ரோகித் ராஜை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது, போலீசார் தற்காப்புக்காக அவரை சுட்டுப் பிடித்தனர். இதில் படுகாயமடைந்த அவரை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், ரவுடி மயிலை சிவகுமார் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.

News August 13, 2024

சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, நாளை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு 470 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க.

News August 12, 2024

காவல்துறை வாகனங்கள் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு

image

சென்னை, அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 11 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 இரு சக்கர வாகனங்கள் வரும் 21-ஆம் தேதி காலை மயிலாப்பூர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன. ஏலம் எடுக்க விரும்புவோர் 20 தேதி மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர்கள்.

News August 12, 2024

சென்னை விமான நிலையத்தில் வன உயிரினங்கள்

image

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் விமானத்தில் அபாயகரமான மலைப் பாம்புகள், ஆப்ரிக்க கருங்குரங்கு, அணில், ஆமைகள் உட்பட 10 உயிரினங்கள் பயணி ஒருவரால் கடத்தி கொண்டு வரப்பட்டன. அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் வன உயிரினங்களை பறிமுதல் செய்து மீண்டும் அவற்றை தாய்லாந்து நாட்டிற்கே அனுப்பி வைத்தனர். சென்னையை சேர்ந்த நபருக்காக இந்த உயிரினங்களை கொண்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

error: Content is protected !!