India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”வரக்கூடிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகத்தை மறக்க மாட்டோம். உடனடியாக தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய நிதி தொகையை ஒன்றிய அரசு செலுத்த வேண்டும். மேக தாதுவில் அணைக்கட்ட ஒன்றிய அரசு கர்நாடகா அரசை அனுமதிக்க கூடாது” என்றார்.
வேலூர் மத்திய சிறையில் இருந்து, பிரபல ரவுடி நாகேந்திரன் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், தற்போது நாகேந்திரனிடம் விசாரணை நடத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனை சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்கள் மற்றும் அதனை சார்ந்த கிளப்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மேலும், இதனை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை செல்லும் விமான டிக்கெட் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. சுதந்திர தினம், வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.4,301 ஆக இருந்த கட்டணம் ரூ.10,796 ஆகவும், மதுரைக்கு ரூ.4,063 ஆக இருந்த கட்டணம் ரூ.11,716 ஆகவும், திருச்சி கட்டணம் ரூ.7,192 ஆகவும், கோவை ரூ.5,349 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை துப்பாக்கியை காட்டி மிரட்டியது உண்மையா? கொலையாளிகளை ஒருங்கிணைத்தது எப்படி? அவர்களுக்கு பணம் எப்படி விநியோகிக்கப்பட்டது? கொலையாளிகளை சிறையில் சந்தித்து நாகேந்திரன் கொலை திட்டம் தீட்டினாரா? கொலையில் அரசியல் பின்புலம் உள்ளதா? என கேள்வி கேட்டு போலீசார் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் உடன் மோதல், எத்தனை ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங் உடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது? நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா? எத்தனை முறை ஆம்ஸ்ட்ராங் உடன் இடம் தொடர்பான பஞ்சாயத்து நடந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்டான்லி, அம்பத்தூர், அன்னை சத்யா நகர், வானகரம், நங்கநல்லூர், ஹஸ்தினாபுரம், பெசன்ட் நகர், செம்பாக்கம், வேளச்சேரி, அனகாபுத்தூர், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், ஆவடி, சோழம்பேடு, திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க.
சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, இன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு 470 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. <
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது, “பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு கல்வித்துறையில் நிலையான முன்னேற்றத்தில் உள்ளதாகவும், நாட்டிற்கான கல்வித் தேவையை பூர்த்தி செய்வதில் ஐஐடி நாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், இம்முறை பெற்ற வெற்றியை விட அடுத்த முறை சிறப்பு செயல்பட்டு வெற்றி பெற ஐஐடி மெட்ராஸ் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை, இராயபுரத்தில் உள்ள RSRM அரசு மருத்துவமனை கடந்த பிப்ரவரி முதல் தாய் சேய் இறப்புகள் பூஜ்ஜியமாக பதிவாகி சாதனை படைத்துள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத்துறையின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக மருத்துவமனையில் தாய் இறப்பு விகிதத்தை குறைத்து பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. 140 ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவமனையில் மாதம் 1,000 பிரசவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.