India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெருநாய் கடியால் மக்கள் அவதி பெரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 4 ஆண்டு காலம் 900 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது 1110 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலம் வரையில் இந்த தண்ணீர் போதுமானதாக இருக்கும் என கே என் நேரு தெரிவித்துள்ளார், சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் காரபாக்கம் கணபதி கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்
சென்னை மாநகராட்சி (2025-26) நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவா் சா்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார், மாநகராட்சியில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறித்து மேயர் பிரியா அறிவித்தார். இதில் கல்வி, சுகாதாரம், மழைநீர்வடிகால் துறை, பூங்கா உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ளிட்ட திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. (மார்ச்.19) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <
சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று (மார்.19) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் எச்சரிக்கை.பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது எனவும் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது எனவும் காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவு
சென்னையில் உள்ள நாய் வளர்பவர்களுக்கான கவனத்திற்கு! வளர்ப்பு நாய்களை பொது இடங்களில் அழைத்து வரும் போது வாய்மூடி அணிவிக்காவிட்டால் 1,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு.சென்னையில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கான விதிமுறைகளை மாநகராட்சி கடுமையாக்க உள்ளது.
சென்னையில் ரூ.2000 பஸ் பாஸ் பெற்று இனி ஏசி பேருந்துகளிலும் பயணிக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.மேலும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 225 ஏசி மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை ரூ.1000 பாஸ் மட்டுமே இருந்து வந்தது.ஆனால் அதில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை பெசன்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோயில் உள்ளது. அறுபடை வீடுகளும் ஒன்றாக சேர்ந்துள்ளதால், பொதுவாக முருகனுக்கே உரிய செவ்வாய் கிழமை, சஷ்டி, கந்த சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பாக வழிபடுவது போலன்றி இங்கு வீற்றிருக்கும் முருகனை எல்லா நாட்களிலும் வழிபடலாம். இங்கு வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.