Chennai

News July 22, 2024

காங்கிரஸில் இணைந்த த.மா.க நிர்வாகிகள்

image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில், இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தனர். இதில், தமிழ் மாநில காங்கிரஸ் செயலாளர் டி.வி.முருகன் உட்பட வட சென்னை கிழக்கு மாவட்டம், மதுரை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த 16 நிர்வாகிகள் இன்று சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.

News July 22, 2024

சினிமா தொடர்பான நூலினை வெளியிட்ட முதலமைச்சர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஏ.ராஜ் மரிய சூசை எழுதியுள்ள உலக சினிமா திரைக்கடல் தேடி என்ற நூலினை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் ராஜ், ஜோதி சிவஞானம், அருள்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 22, 2024

சம்போ செந்திலை நெருங்கிய காவல்துறை

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த வகையில், இந்த கொலைக்கு பிரபல ரவுடி சம்போ செந்தில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் நேபாளத்திற்கு தப்பியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டா பகுதியில் தலைமறைவாகி உள்ளதாக தகவல் கிடைக்க, போலீசார் அவரை நெருங்கி விட்டதாகத் தெரிகிறது.

News July 22, 2024

2 வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

image

சென்னையில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 8ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 வார காலத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் ஜூலை 21 வரை 780 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News July 22, 2024

ரூ.12,000 சம்பளத்தில் வேலை வாங்கி கொடுத்த அமைச்சர்

image

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை கிண்டியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, காகிதம் எடுத்து பிழைக்கும் திருச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர் அமைச்சரை பார்த்து வணக்கம் தெரிவித்தார். அப்போது, ஏன் இந்த வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்ட அமைச்சர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் வேலை கொடுத்தார்.

News July 22, 2024

ஆம்ஸ்ட்ராங் பெயரில் புத்தகம் வெளியீடு

image

கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின், 16ஆம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பா.ரஞ்சித் நீலம் பப்ளிகேசன் சார்பில், ‘சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

News July 22, 2024

தூய்மை பணியாளரை பாராட்டிய மேயர் பிரியா

image

விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவராஜ். இவரது வீட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மாயமாகியது. இதனை தூய்மை பணியாளர் அந்தோணி சாமி மீட்டு கொடுத்தார். இந்நிலையில், அந்தோணி சாமியை மேயர் பிரியா ரிப்பன் கட்டிட வளாகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டி ஊக்கத் தொகையினை வழங்கினார். அவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

News July 22, 2024

த.வெ.க. கட்சி கொடி இதுவா?

image

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியாக மாறிய பிறகு, முதல் நிகழ்வாக கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வரும் 26ஆம் தேதி கொடி அறிமுக விழா நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கொடியின் நிறம் சிவப்பு, மஞ்சள் என இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரு நிறங்கள் கொண்ட 75 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

News July 22, 2024

19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விட்டன

image

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. 3 நாட்களுக்கு முன் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், ஏன் 3 ஆண்டுகாலமாக ஆய்வு செய்யவில்லை? தரமான உணவை வழங்காததால் அம்மா உணவகத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

News July 22, 2024

ரூ.60.29 லட்சம் அபராதம் வசூல்

image

சென்னை மாநகராட்சியில் ஜனவரியில் 234, பிப்ரவரியில்- 285, மார்ச்சில்- 208, ஏப்ரலில்-94, மேயில்- 215, ஜூனில்- 215, ஜூலையில் – 218 என மொத்தம் 1469 என சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை அதிகாரிகள் பிடித்தனர். மேலும், பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.60.29 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!