Chennai

News July 22, 2024

தூய்மை பணியாளரை பாராட்டிய துணை மேயர்

image

சென்னை விருகம்பாக்கம் மன்னார் சாலையில் வசித்து வரும் தேவராஜ் என்பவர் ரூ.5 லட்சம் மதிப்புடைய வைர நகையை குப்பையில் தவறவிட்டார். அதனை, கோடம்பாக்கம் மண்டலத்தில் துப்புரவு பணி மேற்கொள்ளும் பணியாளார் அந்தோணிசாமி மீட்டுக் கொடுத்தார். மாநகர மேயர் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் மகேஷ்குமார் அந்தோணிசாமியை பாராட்டி ஊக்கத் தொகையினை வழங்கினார்.

News July 22, 2024

‘கலைஞர் நூற்றாண்டு’ பேச்சுப் போட்டிக்கு கடைசி நாள்

image

கருணாநிதி நூற்றாண்டையொட்டி தி.மு.க இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

News July 22, 2024

உயர்கல்வி பயிலும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்: அன்புமணி

image

தமிழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகள் தொடங்கி விட்டன. சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அங்கு பயின்ற மாணவர்கள் வேறு கல்லூரியில் எவ்வாறு சேர முடியும் என்றும், மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பை இழக்க நேரிடும் எனவும் பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

News July 22, 2024

போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர டிடிவி வலியுறுத்தல்

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவதற்கான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது மோசமான விளைவையே ஏற்படுத்தும். பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News July 22, 2024

ஆவினில் விற்பனைக்கு வரவுள்ள தயிர் மற்றும் பன்னீர் 

image

ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழ்நாட்டில் 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம், அதிகபட்சமாக 36.09 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு ஆவினின் அனைத்து வகையான பால் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விரைவில் தயிர் மற்றும் பன்னீர் விற்பனைக்கு கொண்டு வர உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 22, 2024

சென்ட்ரல் சதுக்கத்தில் விரைவில் வரவுள்ள 27 மாடி கட்டிடம்

image

சென்னை மக்களின் போக்குவரத்து சிரமத்தை எளிதாக்கும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ட்ரல் சதுக்கம் திறக்கப்பட்டது.
இதன் அருகே 27 மாடி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 27 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News July 22, 2024

மேயர் தலைமையில் வரும் 30-ஆம் தேதி மாமன்ற கூட்டம்

image

சென்னை மாநகராட்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், மழைநீர் வடிகால் பணிகள், புதிய சாலை அமைத்தல், குடிநீர் தட்டுப்பாட்டை குறைத்தல் போன்ற பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளன. மேலும், அவற்றை மேம்படுத்த சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் வரும் 30-ம் தேதி மேயர் பிரியா தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாமன்ற கூட்டத்தில் புதிய திட்டங்கள் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

News July 22, 2024

ரயில்கள் நிறுத்தத்தை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 23.07.24 முதல் 14.08.24 வரை பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரை ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை சமாளிக்கும் விதமாக குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரங்களில் பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரை கூடுதலாக 50 பேருந்துகளும், ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து நிலையம் செல்ல 10 சிற்றுந்துகளும் இயக்கப்படும் என மா.போ.கழகம் அறிவித்துள்ளது.

News July 22, 2024

நீட்தேர்வின் குளறுபடிகள் அம்பலம்: செல்வப்பெருந்தகை

image

நீட் தேர்வு குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, “தமிழ்நாட்டில் 1,52,920 பேர் நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. இது மேலும், குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், நீட்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது” எனக் கூறினார்.

News July 22, 2024

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய 4 கிலோ தங்கம்

image

சென்னை விமான நிலையத்தில் சுங்க துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். சுற்றுலா பயணியாக துபாய் சென்று மீண்டும் சென்னை திரும்பிய விக்னேஸ்வரன் ராஜா(34) என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில், அவர் வைத்து இருந்த காபி மேக்கர் கருவியில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விக்னேஸ்வரன் ராஜாவை கைது செய்தனர்.

error: Content is protected !!