India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தாண்டில் போக்குவரத்துக்குக்கு இடையூறு செய்வதுபோல், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிந்த 1,469 மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை, அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.60.29 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலைகளில் திரியும் மாடுகள் முட்டி பல பேர் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்நிலையில், 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுமா? கேஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்படுமா? அத்தியாவசிய பொருட்களின் வரி குறைக்கப்படுமா? என மக்கள் ஆவலுடன் உள்ளனர். உங்கள் கருத்து என்ன?
திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததுபோல், போலீசார் தங்களையும் என்கவுண்டர் செய்ய உள்ளதாக ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றாவளிகள் நீதிமன்றத்தில் கதறியுள்ளனர். கொலையாளிகள் என கைது செய்யப்பட்டுள்ள அருள், பொன்னை பாலு, ராமு ஆகியோர் நீதிபதி முன்பு கூறியுள்ளனர். இதையடுத்து, குற்றவாளிகளை துன்புறுத்தக்கூடாது என்றும், எப்படி அழைத்து வந்தீர்களோ, அதேபோல் பத்திரமாக அழைத்து செல்ல வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட பகல் நேர புறநகர் மின்சார ரயில் சேவை, வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 10:30 முதல் நள்ளிரவு 2:20 மணி வரை முன்பு அறிவித்து போல ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னதாக அறிவிக்கப்பட்ட ரத்து தொடரும்.
சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை 21ஆம் தேதி வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 411 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 பேரும் அடங்குவர்.
சென்னையில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், முகப்பேர், அரைப்பக்கம், ஐ.சி.எப் காலனி, ஆதம்பாக்கம், பி.ஜே.பி. கார்டன், கங்கை நகரம் பாலாஜி காலனி, போரூர், கோவூர், அம்பாள் நகர், பெசன்ட் நகர், கக்கன் காலனி, இந்திரா நகர், இ.சி.ஆர். சாலை, வெட்டுவாங் கேணி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19 அன்று எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதி கொண்டனர். இதனை அடுத்து எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை மட்டும் வழக்கறிஞர்கள் அலுவலகமாக உபயோகப்படுத்த வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் அலுவலகங்கள் போல் செயல்படுவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது என எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி கோதண்டராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், புதிய மின்சார பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்காக 500 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றச் சென்னையைச் சேர்ந்த ஓஎச்எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த ஈவி டிரான்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஈவிஇ ) உள்ளிட்ட 3 நிறுவனங்கள் போட்டிப் போடுகிறது .
சென்னை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளால் நாளை முதல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது, பகுதி நேரமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநகரப் போக்குவரத்து கழகம் முன்னதாக அறிவித்திருந்த சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்படும் நேரங்களில் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கீழ்பாக்கம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான பணிமனை இடத்தினை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்தவதற்காக இந்த ஆய்வின் மேற்கொள்ளப்பட்டது. இதில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.