India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கானத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முதாசார் அகமது. இவர் நேற்றிரவு மனைவி, 2 குழந்தைகளுடன் பைக்கில் முட்டுக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த சினிமா கேரவன் ஹாரன் அடித்ததால், அவர் நிலை தடுமாறினார். இதைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முதாசாரின் மனைவி பெனாசியர் (30) மற்றும் ஒரு வயது குழந்தை அசின் அகமது (1) உயிரிழந்தனர்.
தாம்பரம் ரயில் பாதையில் பணிகள் நடைபெற்று வருவதால் இன்று (ஆக.17) எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயிலும், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலும், குமரி செல்லும் அதிவிரைவு ரயிலும் எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டிலிருந்து புறப்படும். மேலும், எழும்பூரிலிருந்து இரவு 9 மணிக்கு காரைக்கால் செல்லும் விரைவு ரயில் இன்று 1.25 மணிநேரம் தாமதமாக இரவு 10.25 மணிக்கு புறப்படும்.
சென்னையில் இன்று (ஆக.17) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், புழல், நேரு நகர், கொடுங்கையூா், கஸ்தூரிபாய் நகா், ஒரகடம், காமராஜர் சாலை, மேடவாக்கம், எம்.ஏ.நகர், பாடியநல்லூர், பெசன்ட் நகர், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். SHARE NOW
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழ்நாடு குறித்து சர்ச்சைக் கருத்துக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்பதில் சிக்கல் உள்ளது. ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மத்திய இணை அமைச்சர் சோபா மன்னிப்பு கேட்டுள்ளார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தரப்பு எடுத்து உரைத்துள்ளது. இதனை அடுத்து விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் Executive Engineer வேலைக்கான 16 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் BE/B.Tech தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளம் <
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்குபெற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, திமுகவை கண்டித்து அதிமுக தீர்மானம் கொண்டு வருகிறது என்றால், திமுக நன்றாக செயல்படுவதாக அர்த்தம் என கூறினார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் அதிமுக பெயரில் இணைதளம் தொடங்கி மோசடி செய்ததாக அதிமுக அளித்த புகாரில் சூலுர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்ய கோரி கே.சி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுகவின் புகாரில் இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவம் கே.சி.பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுத்துவிட்டதால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னையில், பருவமழை ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “3,040 கிலோமீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 61 % மழை நீர் வடிகால் பணிகள் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் எவ்வளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்” என்றார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில்கள் ஆக.14-ஆம் தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டது, பணிகள் முடிவடையாததால் ஆக.18-ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே வரும் ஆக.19-ஆம் தேதி முதல் தாம்பரம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் வழக்கம் போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள யுவராஜ்க்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறப்பட்டதை அடுத்து உத்தரவு, தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுப்ரமணியம், மற்றும் வி.சிவஞானம் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sorry, no posts matched your criteria.