India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 130 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை மாதாவரத்திலிருந்து 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். குறிப்பாக கிளாம்பாக்கத்தில் இருந்து படுக்கை வசதி கொண்ட 50 ஏசி பேருந்துகள் நாளை இயக்கப்படும். www.tnstc.in
நாளை மறுநாள் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 130 பேருந்துகளும், நாளை மறுநாள் 250 பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து நாளை 30 பேருந்துகளும் நாளை மறுநாள் மாதவரத்தில் இருந்து 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 6 பேரை பயங்கரவாத தடை சட்டத்தில் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக என்ஐஏ சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் 1913 என்ற புகார் தெரிவிக்கும் சேவையில், புகார்களுக்கு மாநகராட்சியால் தீர்வு காணப்பட்டதை புகார்தாரரிடம் உறுதி செய்த பிறகே அந்த புகாரை முடிக்க வேண்டும் என்று அம்மையத்தின் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். புகாருக்கு தீர்வு காணாமல் முடித்து வைத்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று (ஆக.17) மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இலவச உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்காக, தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, முகலிவாக்கம், கோட்டூர்புரம், திருவான்மியூர், அயனாவரம், சைதாப்பேட்டை, கொண்டித்தோப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா அக 18 அன்று மாலை 6.50 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்ற உள்ளார். மேலும் இந்த நிகழ்வில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
சென்னை கடற்கரை- விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து நாளை (ஆக.18) இரவு 9.55, 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அம்பத்தூர், கொரட்டூர், பாடி, முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் குடை, ராயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழை பெய்ததா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடன் இணக்கமாக செல்ல விரும்புவதாகக் கூறி, அவரை அங்கிள் என அழைப்பது, அவரது வீட்டின் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் நட்பு பாராட்டுவது, பின்னர், நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல அஸ்வத்தாமன் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதில் சார்ஜ் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்தவும், சென்னையில் 75 இடங்களில் அரசுடன் இணைந்து தனியார் நிறுவனம் 75 இடங்களில் ஸ்வாப்பிங் நிலையங்களை அமைக்கிறது. இங்கு சார்ஜ் காலியான பேட்டரியை ஒப்படைத்து விட்டு, 2 முதல் 5 நிமிடங்களில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பெற முடியும். பேட்டரியின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.