Chennai

News July 24, 2024

நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்

image

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில், ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவிகளை 941 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 10 நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அவர்களது மரபு உரிமையினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி போன்ற நலத்திட்ட உதவிகளை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

News July 24, 2024

சென்னையில் கட்டிட அனுமதி பெற சதுர அடிக்கு ரூ.100

image

தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனைகளில் 3500 சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு சுய சான்று அடிப்படையில் உடனடி கட்டட அனுமதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தத் திட்டத்தை பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News July 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவுடி வைரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு தனது சொந்த ஊரான வீரநல்லூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நெல்லையில் அவரை கைது செய்தனர். அவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News July 24, 2024

சம்போ செந்திலுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரனை, போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொண்ணை பாலு, அருள், ராமுக்கு 3 நாள் போலீஸ் விசாரணைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சம்போ செந்தில் எவ்வாறு ஹரிஹரனை தொடர்பு கொண்டார் என்ற கோணத்திலும், அவர் செல்போன் சிக்னல் வைத்தும் சம்போ செந்தில் எந்த நாட்டில் இருந்து உள்ளார் என்பதற்கான லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.

News July 24, 2024

2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்

image

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஜூலை 10 முதல் 19ஆம் தேதி வரை 8 நாட்கள், நாடாளுமன்ற தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்ட ஆலோசனையை நடத்தினார். இந்நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 2ஆம் கட்ட ஆலோசனை நடத்துகிறார். இன்றைய கூட்டத்தில் காலை 10 மணிக்கு தேனி மாவட்ட நிர்வாகிகளும், மாலை 4 மணிக்கு ஆரணி மக்களவைத் தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

News July 24, 2024

கட்சி நிர்வாகிகளுக்கு விருந்தளித்த அமைச்சர்

image

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருந்தளித்தார். இதில், அமைச்சர்கள் கே.என் நேரு, தங்கம் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டு அறுசுவை உணவை ருசித்து சாப்பிட்டனர்.

News July 24, 2024

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீசார் சஸ்பெண்ட்

image

சென்னை வேப்பேரி பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது. லஞ்ச பணத்தை மஞ்சப் பையில் வாங்கிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் சுதாகர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 24, 2024

சென்னையில் நாளை மின்தடை

image

சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே நகர், வளசரவாக்கம், வடபழனி, போரூர், குன்றத்தூர், அம்பத்தூர், அயப்பாக்கம், அயனம்பாக்கம், தண்டையார்பேட்டை, அத்திப்பட்டு புது நகர், அடையாறு, இந்திரா நகர், சோழிங்கநல்லூர், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

News July 24, 2024

அருளை தனியாக அழைத்துச் சென்று விசாரிக்கும் போலீஸ்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை, போலீசார் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 2ஆவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை, இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: பணம் கொடுத்தவர்கள் பட்டியல் தீவிரம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். முதலில் கைது செய்யப்பட்ட 8 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பலகோடி ரூபாய் கைமாறியிருக்கிறது. அதில், சென்னையில் உள்ள பிரபல ரவுடிகளும் அடங்குவர். அவர்களுடைய பட்டியலைத் தயாரித்து, விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!