Chennai

News August 19, 2024

ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்த செம்பியம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆந்திராவில் பதுங்கியிருந்த பொற்கொடியை கைது செய்ததையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து பொற்கொடியை செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 19, 2024

அஸ்வத்தாமன் பரபரப்பு வாக்குமூலம்

image

3 விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தாக அஸ்வத்தாமன் வாக்குமூலம் அளித்துள்ளார். “ஒரக்காடு நிலப்பிரச்சனையில் என்னை உள்ளே நுழைய விடாமல் செய்தது, மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் என் மீது புகார் அளித்தது, BSP மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் என் தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்தது” என்றார்.

News August 19, 2024

முதல்வருக்கு ராக்கி கட்டிய பெண்கள்

image

தமிழகம் முழுவதும் இன்று ரக்ஷா பந்தன், கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்த்தித்து, பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி, சகோதரிகள் லட்சுமி, மல்லிகா, கயல்விழி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ராக்கி கட்டி கொண்டாடினர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

News August 19, 2024

இடஒதுக்கீட்டில் சாதித்த சென்னை மாணவிகள்

image

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டார். இதில், சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் 7.5 இடஒதுக்கீட்டில் படித்த ரூபிகா என்ற மாணவி, 699 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் (இடஒதுக்கீட்டில்) பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, அதேப் பள்ளியில் படித்த காயத்ரி தேவி என்ற மாணவி 668 மதிப்பெண்கள் பிடித்து 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News August 19, 2024

டாப் இடங்களை பிடித்த சென்னை மாணவர்கள்

image

மருத்துவப் படிப்புகளான MBBS, BDS உள்ளிட்ட 19 வகையான படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, இன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் வெளியிட்டார். இதில், அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சையது என்ற மாணவன் 2ஆவது இடமும், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த சைலஜா என்ற மாணவன் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். நாமக்கல் மாணவி முதலிடம் பிடித்தார். இவர்களை பாராட்டலாமே!

News August 19, 2024

ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆற்காடு சுரேஷின் நினைவுநாளான நேற்று, ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை தமிழக சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரவுடி நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அடையாறு, சாஸ்திரி நகர், எல்.பி.சாலை, பரமேஸ்வரி நகர், பத்மநாபா நகர், ஆதம்பாக்கம், சோலைப்பன் தெரு, யூனியன் கார்பைடு காலனி, புழுதிவாக்கம் பிராதன சாலை, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, எம்.பி.ராஜகோபால் தெரு, பகத்சிங் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

News August 19, 2024

விரைவு, மின்சார ரயில் சேவைகள் சீரானது

image

தாம்பரம் ரயில் பாதையில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் நேற்று காலை வெற்றிகரமாக முடிவடைந்தன. பணிகள் முடிந்ததால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி ரயில் சேவை தொடங்கியது. இன்று முதல் புறநகர் மின்சார ரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என்றும், விரைவு ரயில்களும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.

News August 18, 2024

சென்னையில் கலைஞர் குறித்த சிறப்பு அம்சங்கள்

image

கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம். மேலும், கருணாநிதியின் 8 நூல்களின் பெயர் மீது கைவைத்தால், அந்நூல்கள் பற்றிய வீடியோ விளக்கம் கிடைப்பது உள்ளிட்ட வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளன.

News August 18, 2024

கலைஞர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை

image

கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதில் பங்கேற்கவில்லை. தனது சொந்த வேலைகளுக்காக வெளியூரில் உள்ளதால் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பதையும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சி சார்பாக முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!