Chennai

News July 25, 2024

அஸ்திரேலிய தமிழர் நலன் குறித்து ஆலோசனை

image

இந்தியாவிற்கான அஸ்திரேலியா துணை தூதர் சிலாய் சாக்கி மற்றும் டேவிட் எங்கேல்டோன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை  இன்று  சந்தித்தனர். இந்நிகழ்வின் போது அஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலன் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

News July 25, 2024

திமுகவின் புதிய ஊதுகுழல் சேகர்பாபு

image

பதவி இருக்கும் மமதையில் அமைச்சர் சேகர்பாபு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். “சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90% முடிவடைந்துள்ளதாக சேகர்பாபு பொய் பேசி வருகிறார். கடந்த பருவ மழையின்போது இதே போன்று பொய் பேசி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கினர். திமுகவின் புதிய ஊதுக்குழலான சேகர்பாபு இபிஎஸ் மீது விஷத்தை கக்கி இருக்கிறார்” என்றார்.

News July 25, 2024

ஆவடியில் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம்

image

தமிழக முழுவதும் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆவடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சில மாதங்களாக கிடைக்காததது உள்ளிட்ட பலவற்றை கண்டித்து நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.

News July 25, 2024

பெரம்பூரில் புதிய ரயில் முனையம்

image

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்களைத் தொடர்ந்து 4ஆவது ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்பணி ஒரு மாதத்தில் முடியும். அதைத்தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி கோரப்படும். நிதி ஒதுக்கப்பட்டால் அடுத்த 3-4 ஆண்டுகளில் பணி முடிந்துவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

கம்யூனிஸ்டு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசு நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில், தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌. அதன் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையிலான இந்த ஏற்பதில், சென்னை மாவட்ட செயலாளர்கள், மாநிலச் துணை செயலாளர் என ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News July 25, 2024

கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை சரிவு

image

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கடந்த ஒரு மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தக்காளி ரூ.35க்கும், கேரட் ரூ.100க்கும், வெங்காயம் ரூ.30க்கும், உருளை ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.50க்கும், எலுமிச்சை பழம் ரூ.130 என அனைத்து காய்கறி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு காய்கறிகளின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை குறைந்துள்ளது.

News July 25, 2024

சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஜூலை 25) மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், சென்னையில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

வரவிடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை திருவண்ணாமலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், 27ஆம் தேதி 290 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகைக்கு 26, 27 ஆகிய தேதிகளில் தலா 65 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு <>TNSTC<<>>-ஐ செக் பண்ணுங்க.

News July 24, 2024

ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 03 தேதி சென்னையில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை ,சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து  இராமேஸ்வரத்திற்கும், 04 தேதி இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News July 24, 2024

பால் கொள்முதலுக்கு புதிய சங்கங்கள் அமைக்க திட்டம்

image

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் இன்று  அனைத்து மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், பால் கொள்முதல் செய்ய புதிய சங்கங்கள் அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறினார். மேலும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

error: Content is protected !!