Chennai

News August 20, 2024

கலைஞர் நாணயத்தை பெற்றுக் கொண்ட செல்வப் பெருந்தகை

image

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ர கலைஞர் நூற்றாண்டு விழாவில், கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் கலந்து கொண்ட நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சத்தியமூர்த்திபவனில் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக செல்வப்பெருந்தகைக்கு வழங்கினார்.

News August 20, 2024

சென்னையில் 10 மணி நேரம் தாமதமாக புறப்படும் ரயில்

image

சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் எண்.12840 ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் ரயில் 20.08.24 (இன்று) மாலை 19.00 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று புறப்பட வேண்டிய ரயில் 10 மணி நேரம் தாமதமாக நாளை 21.08.24 காலை 05.00 மணிக்குப் புறப்படும் என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்கள் இதில் பயணிக்கவிருந்தால் அவர்களுக்கு ஷேர் செய்து தெரிவிக்கவும்.

News August 20, 2024

வைகோவுக்கு கருணாநிதி உருவ படம் பொறித்த நாணயம்

image

கருணாநிதி உருவ படம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை அண்ணா அறிவாலயத்தில் 10,000 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நாணயம் கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நாணயத்தை வழங்கினார்கள்.

News August 20, 2024

குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 27 தேதிக்கு வழக்கு தள்ளுபடி

image

சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டுமனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்தாக, ஐ.பெரியசாமி, ஜாபர்சேட் உள்ளிட்ட ஏழு பேர் மீது 2013 ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இதில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு, குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 27 தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 20, 2024

சென்னையில் ரவுடி ஆசைத் தம்பி கொலை

image

சென்னையில் பிரபல ரவுடி ஆசைத்தம்பி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.கே.பி. நகரைச் சேர்ந்த இவர், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவரும், சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியும் ஆகும். இந்நிலையில், தலையில் கடப்பா கல்லை போட்டு மர்மமான முறையில் இவர் கொல்லப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றிய எம்.கே.பி. நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 20, 2024

வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பு பணி

image

சென்னையில் உள்ள அனைத்து வாக்காளர்கள் விவரங்களை சரிபார்க்கும் பணி, இன்று முதல் செப்.18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 20, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல், சோழிங்கநல்லூர், சிறுசேரி, செம்மஞ்சேரி, எல்காட் ரோடு, ஓ.எம்.ஆர், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, டிடிகே சாலை, விசாலாட்சி தோட்டம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்படும். 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும்.

News August 20, 2024

பெசன்ட்நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை

image

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நடைபாதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

News August 20, 2024

சென்னையில் 9 குழந்தைகளை மீட்ட காவல்துறை

image

சென்னையின் பல்வேறு இடங்களில் பிச்சை எடுக்க உட்படுத்தப்பட்ட ஒன்பது குழந்தைகள் சென்னை காவல்துறையின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறார்களை பிச்சை எடுப்பதற்கு உட்படுத்திய பெற்றோர்களிடம் இருந்து மீட்ட போலீசார் குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பெற்றோர்களை கடுமையாக எச்சரித்த பின்னர் குழந்தைகள் மற்றும் சிறார்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

News August 19, 2024

சென்னையில் பாஜக பொதுக்கூட்டம்

image

இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னையில் வரும் 25ஆம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். அதற்கு அனுமதி அளிக்குமாறு குறிப்பிட்டு இருந்தார்.

error: Content is protected !!